பிளே ஆப் வாய்ப்பே போயிடுச்சி. இனியாவது அவருக்கு சேன்ஸ் குடுங்க – இளம்வீரருக்கு சி.எஸ்.கே ரசிகர்கள் ஆதரவு

CSK-Fans
- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய ஜாம்பவான் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது ஆரம்ப காலத்திலிருந்து இன்றளவும் மிகப்பெரிய அணியாக ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வருகிறது. இதுவரை 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள சென்னை அணியானது கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் கோப்பையை கைப்பற்றி தற்போது நடப்பு சாம்பியனாக இருந்து வருகிறது. இதுவரை சென்னை அணி பங்கேற்றுள்ள ஐபிஎல் தொடர்களில் 2020-ஆம் ஆண்டு தவிர்த்து மற்ற ஆண்டுகள் அனைத்திலும் பிளே ஆப் சுற்றுக்கு சென்ற ஒரே அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது.

CSK-1

- Advertisement -

ஆனால் இந்த 15-ஆவது ஐபிஎல் தொடரானது சென்னை அணிக்கு அவ்வளவு குதூகலமாக அமையவில்லை என்றே கூறலாம். ஏனெனில் இத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதனை தொடர்ந்து ஜடேஜா தலைமையில் சென்னை அணி எவ்வாறு செயல்படப் போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் சென்னை அணி இதுவரை மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது என்று கூறலாம்.

ஏனெனில் இதுவரை நடைபெற்றுள்ள 8 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள சிஎஸ்கே 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இதன் காரணமாக இனிவரும் 6 போட்டிகளில் மெகா வெற்றியை பதிவு செய்தால் மட்டுமே சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல ஒரு வாய்ப்பு உள்ளது என்றும் மற்றபடி ஒரு போட்டியில் தோற்றால் கூட சிஎஸ்கே பிளே ஆப்புக்கு செல்லாது என்று கூறப்படுகிறது.

Hangargekar 1

இந்நிலையில் சென்னை அணியின் ரசிகர்கள் அனைவரும் கிட்டத்தட்ட நமக்கு பிளே ஆப் வாய்ப்பு என்பது முடிந்துவிட்டது. இதன் காரணமாக இனியாவது இந்த ஐபிஎல் தொடரில் பயன்படுத்தாமல் இருக்கும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளியுங்கள் என்று தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் இளம் வீரரான ராஜ்வர்தன் ஹங்கரேகருக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

- Advertisement -

ஏனெனில் 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையில் அசத்தலாக பந்துவீசிய அவர் பேட்டிங்கிலும் அதிரடியாக விளையாட கூடியவர் என்பதனால் அவருக்கு இனி வரும் போட்டிகளிலாவது வாய்ப்பு அளித்து அவரை மெருகேற்றுங்கள் என்று கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க : இந்த ஐ.பி.எல் தொடரில் கண்டறியப்பட்ட மிகச்சிறந்த புதுமுகம் இவர்தான் – சவுரவ் கங்குலி பாராட்டு

ஏற்கனவே சென்னை அணி மீது தமிழக வீரர்களை விளையாட வைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்து வரும் வேளையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்து வருவதும் ஒரு குறையாக பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement