கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் நடைபெற்று வந்த நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நேற்று நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியுடன் நிறைவுக்கு வந்தது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டு மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அவர்களை எளிதாக வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை தட்டிச் சென்றது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த இறுதிப் போட்டிக்கும் இதற்கு முன்னதாக மார்ச் மாதம் நடைபெற்ற மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கும் உள்ள ஒரு ஒற்றுமையான நிகழ்வு அனைவரது மத்தியிலும் பிரமிக்க வைத்துள்ளது. அந்த வகையில் இந்த இரண்டு போட்டிகளிலும் இருக்கும் ஒற்றுமை குறித்த விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் 17-ஆம் தேதி நடைபெற்ற மகளிர் ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்ருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணியும், மேக் லானிங் தலைமையிலான டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மெக் லானிங் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் விளையாடிய அவர்கள் சரியாக 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே குவித்தனர். அதேபோன்று பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அந்த போட்டி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி இருந்தது.
அதேபோன்று நேற்று நடைபெற்ற இந்த ஆடவர் ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து சரியாக 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே அடித்தது. பின்னர் விளையாடிய கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : உண்மையா சொல்லனும்னா எங்களை விட கொல்கத்தா அணி அந்த விதத்துல பெஸ்ட் – தோல்விக்கு பிறகு கம்மின்ஸ் பாராட்டு
இந்த இரண்டு இறுதி போட்டிகளிலுமே தோல்வி பெற்ற அணியில் இருந்தது ஆஸ்திரேலியா கேப்டன்கள் (மெக் லானிங், கம்மின்ஸ்) தான். அதேபோன்று டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து சரியாக 18.3 ஓவர்களில் இரு அணிகளுமே 113 ரன்கள் மட்டுமே அடித்தனர். அதேபோன்று இந்திய கேப்டன்களான (மந்தனா, ஷ்ரேயாஸ்) ஆகியோரது அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்த ஒற்றுமையான நிகழ்வு நெட்டிசன்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.