ஐ.பி.எல் போட்டிகளில் தோனியின் தலைமையின் கீழ் விளையாட வேண்டும் – ராஜஸ்தான் வீரர் விருப்பம்

Dhoni-3 IPL
- Advertisement -

இந்தியாவில் வளர்ந்து வரும் இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடிக்க ஒரு முக்கிய வாய்ப்பாக கருதப்படும் இடமாக ஐபிஎல் தொடரின் களம் அமைந்து வருகிறது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் பல இளம் வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பினை பெற்றுள்ளனர். அந்த வகையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் ஒரு கனவு களமாக மாறியுள்ள இந்த ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் கீழ் விளையாட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் உள்ளது.

IPL

- Advertisement -

அந்த வகையில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கடந்த ஆண்டு விளையாடிய இளம் வேகப்பந்து வீச்சாளரான சேத்தன் சக்காரியா தோனியின் தலைமையின் கீழ் தான் விளையாட வேண்டும். அதுவே எனது தனது கனவு என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தோனியின் ஆலோசனையால் எனது ஆட்டத்தை வேறு நிலைக்கு கொண்டு செல்ல முடியும் நான் நம்புகிறேன்.

இந்தியாவுக்காக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் விளையாட விரும்புகிறேன். மேலும் தோனியின் தலைமையின் கீழ் ஐபிஎல் தொடரில் விளையாடினால் அவரது அனுபவம் மூலம் என்னுடைய திறமை இன்னும் மேம்படும். அவரின் தலைமையின் கீழ் விளையாடுவது என்னுடைய கனவு என்று சக்காரியா கூறியுள்ளார்.

sakariya

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தேர்ந்தெடுக்கப்பட்ட சேத்தன் சக்காரியா மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர் என்றும் தற்போது தனது வாழ்க்கையே ஐபிஎல் மாற்றி உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : உங்க பவுலிங் ஸ்டைல் ரூல்ஸ்ஸை மீறி இருக்கு. 21 வயது பாக் வீரரை தடை செய்த ஐ.சி.சி – விவரம் இதோ

சென்ற ஆண்டு தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் இலங்கை தொடரின்போது இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார். அதோடு இந்திய அணிக்காக 1 ஒருநாள் போட்டியிலும், 2 டி20 போட்டியிலும் அவர் விளையாடியுள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு மெகா ஏலத்தில் அவருக்கு நல்ல போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement