தோனி இல்லனா யாருமே சிஎஸ்கே மேட்ச்ச பாக்க மாட்டாங்க.. முன்னாள் சென்னை வீரர் பேட்டி

dhoni
- Advertisement -

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலம் விரைவில் துபாயில் கோலாகலமாக நடைபெற உள்ளது. அதில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாகவும் நடப்பு சாம்பியனாகவும் திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் 16.25 கோடிக்கு வாங்கப்பட்ட நட்சத்திர இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை விடுவித்துள்ளது. அத்துடன் அந்த அணியின் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் தோனியின் பெயர் முதலாவதாக இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

ஏனெனில் 2008இல் ஐபிஎல் துவங்கப்பட்டது முதல் சென்னை அணியை வழி நடத்தி வரும் அவர் மிகச்சிறந்த விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மேனாகவும் செயல்பட்டு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் கேப்டனாகவும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் முடிவுகளை எடுத்து 5 கோப்பைகளை வென்றுள்ள அவர் ரோகித் சர்மாவுக்கு நிகராக வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

பாக்க மாட்டாங்க:
அத்துடன் இந்தியாவுக்காகவும் 3 விதமான உலகக் கோப்பைகளை வென்று மகத்தான வீரராக சாதனை படைத்துள்ள அவர் 2019 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற்று ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். அதனால் அவருடைய ஆட்டத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஒரு வருடம் காத்திருந்து ஐபிஎல் தொடரில் உச்சகட்டமாக தோனியை கொண்டாடி வருகிறார்கள்.

இருப்பினும் 41 வயதை கடந்து விட்ட அவர் முழங்கால் வலியால் அவதிப்படுவதால் 2024இல் விளையாடுவாரா என்று நிலவிய சந்தேகம் தற்போது சென்னை அணியின் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை பார்த்த பின் ரசிகர்களுக்கு தெளிவாகியுள்ளது. இந்நிலையில் தோனி என்ற ஒருவருக்காகவே சென்னைக்காக பெரும்பாலான ரசிகர்கள் ஆதரவு கொடுப்பதாக அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதனால் தோனி ஓய்வுக்கு பின் பாதிக்கும் மேற்பட்ட ரசிகர்கள் யாரும் சென்னை போட்டிகளை பார்க்க மாட்டார்கள் என்று சந்தேகம் தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு குறிப்பிட்ட வீரரை தாண்டி ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள். அவர்களுடைய ரசிகர்கள் எப்போதும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கானவர்கள். ஆனால் சென்னை அணி வித்தியாசமானது”

இதையும் படிங்க: அவருக்கு லாலிபாப் கொடுக்குறீங்களா? முக்கிய வீரருக்காக தேர்வுக் குழுவை விளாசிய ஹர்பஜன்

“அதாவது சென்னை ரசிகர்கள் முதலில் தோனி ரசிகர்கள். அதன் பின்பே சிஎஸ்கே ரசிகர்கள். ஒருவேளை மஹி பாய் அங்கே இல்லாமல் போனால் சென்னை விளையாடும் போட்டிகளின் மைதானங்கள் பாதியளவு நிரம்புமா எனக்கு சந்தேகமாக தெரிகிறது. ஏனெனில் அவர்கள் தோனி ரசிகர்கள்” என்று சென்னை மற்றும் மும்பை ஆகிய 2 அணிகளிலும் விளையாடிய ராயுடு தெரிவித்துள்ளார். அவர் கூறுவது போல தல என்று கொண்டாடப்படும் தோனி ஓய்வு பெற்றால் சென்னை அணிக்கு இப்போதுள்ள அதே ரசிகர்கள் தொடர்ந்து நீடிப்பார்களா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

Advertisement