- Advertisement -
கிரிக்கெட் செய்திகள் | Today Cricket news in Tamil

இந்திய வீரர் முகமது ஷமி மீது கோர்ட்டில் வழக்கு பதிவு – காரணம் அவரது மனைவியே

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை முடித்தது. அடுத்தது இன்னும் ஒரு வாரத்தில் வீரர்கள் அனைவரும் ஐ.பி.எல் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.இதற்கடுத்து நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷமிக்கு மீண்டும் ஒரு சிக்கல் வந்துள்ளது. அதாவது அவரின் மீது கோர்ட்டில் வழக்கினை மீண்டும் தொடுத்துள்ளார் ஷமியின் மனைவி ஹசின் ஜகான். இவர் ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன் கோர்ட்டில் வழக்கினை தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இம்முறை மீண்டும் டவுரி மற்றும் வேறுஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறி ஷமி மீது வழக்கினை தொடர்ந்துள்ளார். ஏற்கனவே ஷமி வேறுஒரு பெண்ணுடன் செய்த மொபைல் சேட்டினையும் வெளியிட்டு இருந்தார் ஹசின் ஜகான். கடந்தமுறை சில வாதங்களுக்கு பிறகு மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது மீண்டும் அவர்மீது வழக்கு தொடர்ந்திருப்பதால் அவரின் உலகக்கோப்பை இடம் கேள்விக்குறி ஆகியுள்ளது. ஏனெனில் வழக்கு உறுதியானால் அவரால் வெளிநாடு செல்ல இயலாது. எனவே, இங்கிலாந்தில் நடைபெறும் இந்த தொடரில் அவர் இடம் பெறுவது சந்தேகம் தான் என்றே கூற வேண்டும்.

- Advertisement -
Published by