நானும் அந்த இந்திய வீரரை போன்று பயமில்லாமல் விளையாடப்போறேன் – ஜாஸ் பட்லர் ஓபன்டாக்

Buttler
- Advertisement -

இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜாஸ் பட்லர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் எப்பேர்பட்ட அதிரடி வீரர் என்பது நாம் அறிந்ததே. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அடித்து நொறுக்கும் ஜாஸ் பட்லர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் பெரிய வீரராக பெயர் எடுக்கவில்லை. மேலும் டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்து வரும் ஜாஸ் பட்லர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பின்வரிசையில் களமிறங்கி வருகிறார்.

buttler

- Advertisement -

இருப்பினும் அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் ஆஷஸ் தொடரில் தான் அதிரடியாக விளையாடி அதிக அளவில் ரன்கள் சேர்க்க விரும்புவதாக பட்லர் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய வீரர் ஒருவரை போன்று பயமில்லாத ஆட்டத்தை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் போன்று நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் பயமற்ற ஆட்டத்தினை விளையாட விரும்புகிறேன். ஆஸ்திரேலிய மண்ணில் பண்ட் விளையாடிய கிரிக்கெட் என்னை மிகவும் ஈர்த்தது. ஆரம்பத்தில் நிதானமாக துவங்கி பின்னர் அடித்து ஆடும் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய மண்ணில் அதே பார்முலாவை வைத்து மேட்ச் வின்னிங் இன்னிசை விளையாடினார்.

  1. pant 4

ஆனால் எந்த இடத்திலும் பயப்படவில்லை. துளியும் பயமற்ற ஆட்டத்தினையே வெளிப்படுத்தினார். நானும் அவர் வழியை பின்பற்றி ஆஸ்திரேலிய மண்ணில் பொறுமையாக துவங்கி பின்னர் நிலைத்து நின்று அதிரடியாக விளையாட விரும்புகிறேன் என்று பட்லர் கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலியின் இடத்தில் இன்றைய போட்டியில் விளையாட வாய்ப்பிருக்கும் 3 வீரர்கள் – சேன்ஸ் யாருக்கு?

ரிஷப் பண்ட் போன்று பயமின்றி விளையாடினால் என்னால் ஆஸ்திரேலிய மண்ணில் ரன்கள் குவிக்க முடியும் என்றும் ஜாஸ் படலர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 5 போட்டிகள் கொண்ட இந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரானது வரும் டிசம்பர் 8-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement