IPL 2023 : தோனிக்கு மட்டும் ஒரு நியாயமா? அம்பயர்கள் ஏன் தட்டி கேட்காம சிரிச்சாங்க – முன்னாள் ஆஸி வீரர் விளாசல்

- Advertisement -

உச்சகட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் எம்எஸ் தோனி தலைமையில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் லீப் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்தது. அதைத்தொடர்ந்து தங்களது சொந்த ஊரான சேப்பாக்கத்தில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த நடப்பு சாம்பியன் குஜராத்தை குவாலிபயர் 1 போட்டியில் எதிர்கொண்டு 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை மே 28இல் நடைபெறும் மாபெரும் இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்று அசத்தியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை ருதுராஜ் 60, கான்வே 40 என தொடக்க வீரர்களின் பொறுப்பான ரன்கள் குவிப்பால் 173 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய குஜராத்துக்கு சுப்மன் கில் அதிகபட்சமாக 42 (38) ரன்கள் எடுத்த போதிலும் இதர வீரர்கள் சென்னையின் நேர்த்தியான பந்த வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தனர். அதனால் 20 ஓவர்களில் டெல்லியை 157 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய சென்னை சார்பில் அதிகபட்சமாக தீக்சனா, பதிரனா, ஜடேஜா, சஹர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதனால் பங்கேற்ற 14 சீசன்களில் 10வது முறையாக சென்னையை ஃபைனலுக்கு அழைத்துச் சென்ற தோனியின் கேப்டன்ஷிப் அனைவரும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

- Advertisement -

கேட்க ஆள் இல்லையா:
இருப்பினும் அப்போட்டியில் 15வது ஓவரின் முடிவில் மதிசா பதிரனா ஓய்வெடுப்பதற்காக பெவிலியன் சென்று 4 நிமிடங்கள் தாமதமாக திரும்பியதால் அடுத்த ஓவரை வீசுவதற்கு தோனி அழைத்த போது நடுவர்கள் மறுப்பு தெரிவித்தனர். குறிப்பாக களத்திற்குள் வந்து 4 நிமிடங்கள் முடிந்த பின்பு தான் அவரை பந்து வீச அனுமதிக்க முடியும் என்று நடுவர்கள் தோனியிடம் தெளிவாக கூறிவிட்டனர். ஆனால் அந்த ஓவரை வீசுவதற்காக ஏற்கனவே திட்டமிட்டய 3 ஓவர்களை அவருக்காக ஒதுக்கி தோனி வைத்திருந்தார்.

அதனால் கடைசியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 20 ஓவர்களை வீசி முடிக்காமல் போனால் அதற்கான அபராதத்தை ஏற்றுக் கொள்ள தயார் ஆனால் அடுத்த ஓவரை அவர் தான் வீச வேண்டும் என்று தோனி விடாப்பிடியாக நடுவர்களிடம் சொல்லிக்கொண்டே காலத்தை கடத்தினார். அதற்குள் 4 நிமிடங்கள் முடிவுக்கு வந்த நிலையில் நடுவர்களும் அடுத்த ஓவரை பதிரனா வீசுவதற்கு அனுமதி கொடுத்ததால் சுமார் 5 நிமிடங்கள் கழித்து மீண்டும் போட்டி துவங்கியது. அந்த வகையில் நடுவர்கள் மற்றும் விதிமுறையை தனது சாதுரியத்தால் சாதித்த தோனியின் கேப்டன்ஷிப் சென்னை ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

- Advertisement -

ஆனால் அந்த சமயத்தில் நடுவர்கள் கூறியதும் வேறொரு பவுலரை வைத்து பந்து வீசாமல் போட்டியை வேண்டுமென்று 5 நிமிடங்கள் வரை தாமதப்படுத்திய தோனியின் செயல் நிறைய சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தோனி அவ்வாறு கூறினால் என்ன? அந்த பவுலருக்கு பதிலாக வேறு பவுலரை தான் அனுமதிக்க முடியும் என்று ஏன் நடுவர்கள் சொல்லவில்லை? என எதிரணி ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதிலும் குறிப்பாக இதுவே மும்பையாக இருந்தால் நாங்கள் நடுவர்களை விலை கொடுத்து வாங்கியதாக பேசுபவர்கள் இப்போது அமைதியாக இருப்பது ஏன்? என்று அந்த அணி ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அது போக அந்த சமயத்தில் நடுவரின் சொல்லுக்கு எதிராக செயல்பட்ட தோனிக்கு அபராதம் உட்பட வேறு எந்த தண்டனையும் கொடுக்கப்படாதது ஏன்? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்நிலையில் அந்த சமயத்தில் சாதுரியமாக விதிமுறையை மீறிய தோனியை தட்டி கேட்காமல் நடுவர்கள் சிரித்துக் கொண்டிருந்ததாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் விமர்சித்துள்ளார் இது பற்றி ட்விட்டரில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: IPL 2023 : என்னோட மதிப்பு தெரில, சிஎஸ்கே ரசிகர்களை நேரடியாக தாக்கிய ஜடேஜா – ரசிகர்கள் அதிருப்தி, நடந்தது என்ன?

“தோனி தன்னுடைய இருப்பை பயன்படுத்தி 4 நிமிட விவாதத்தில் நடுவர்களை கவர்ந்தார். அதனால் நீண்ட இடைவெளிக்கு பின் பதிரான பந்து வீசுவதற்கு நேரம் அவுட்டானது. அந்த சமயத்தில் நடுவர்கள் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக சம்பவத்தை பார்த்து சிரித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறியுள்ளார். இருப்பினும் அதற்கு அண்டர் ஆர்ம் பந்தை வீசிய வரலாறு கொண்ட ஆஸ்திரேலியாவை சேர்ந்த நீங்கள் கிரிக்கெட்டின் நேர்மை தன்மையை பேசுவது நகைச்சுவையாக இருப்பதாக இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கின்றனர்.

Advertisement