வெறும் 2 போட்டியில் விளையாடவா இவரை சேத்தீங்க. சென்னை அணியில் இருந்து வெளியேறிய வீரரை – வெளுத்து வாங்கிய ரசிகர்கள்

- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் 16-வது சீசனும் தற்போது இறுதி கட்டத்தையும் நெருங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி துவங்கிய இந்த 16-ஆவது ஐ.பி.எல் தொடரானது தற்போது லீக் சுற்றின் இறுதியை நெருங்கியுள்ளது. அதோடு அடுத்து பிளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன.

IPL-2023

- Advertisement -

இந்நிலையில் இந்த நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்றில் விளையாடும் நான்கு அணிகளில் ஏற்கனவே குஜராத், சென்னை மற்றும் லக்னோ ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களை பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள வேளையில் நான்காவது இடத்தை பிடிக்கப்போகும் அணி எது என்பது குறித்த விவரம் இன்று இரவு தெரிந்து விடும். அதன்படி முதலாவது குவாலிபயர் போட்டியில் குஜராத் மற்றும் சென்னை அணியும், இரண்டாவது குவாலிபயர் போட்டியில் இன்று நான்காம் இடம் பிடிக்கும் அணி லக்னோ அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற முக்கியமான லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்திய சென்னை அணியானது புள்ளி பட்டியலில் 17 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்து தங்களது வாய்ப்பினை உறுதி செய்தது. இந்நிலையில் இந்த கடைசி லீக் போட்டி முடிந்த கையோடு சென்னை அணியில் இருந்து முன்னணி ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் வெளியேறி நாடு திரும்பியுள்ளார் என்ற தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Stokes

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு தயாராகும் வகையில் அவர் நாடு திரும்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் 16.25 கோடிக்கு வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் துவக்கத்தில் காயம் காரணமாக சென்னை அணியில் சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த வேளையில் இடையில் வாய்ப்பினை பெற்று வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

- Advertisement -

அப்படி அவர் விளையாடிய 2 போட்டிகளில் 15 ரன்கள் மட்டுமே குவித்தார். அதோடு பந்துவீச்சில் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. இப்படி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு இந்த தொடரின் பிற்பகுதியில் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது.

இதையும் படிங்க : MI vs SRH : வாழ்வா – சாவா போட்டியில் ஹைதராபாத்தை வெளுத்த க்ரீன் – ரோஹித் சர்மா, மும்பை பிளே ஆஃப் சென்றதா?

இந்நிலையில் இந்த தொடர் முழுவதுமாக முடியும் முன்னரே அவர் வெளியேறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை கோடிகள் கொடுத்து அவரை விலைக்கு வாங்கியதற்கு பதிலாக வேறுயெந்த வீரரையாவது வாங்கியிருக்கலாம் இவர் சென்னை அணிக்கு பொருத்தமற்றவர் என ரசிகர்கள் தங்களது காட்டமாக கருத்துக்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement