என்னய்யா இதெல்லாம் ஒரு கேள்வியா? கடுப்பாகி முகத்தை திருப்பிய பாபர் அசாம் – நடந்தது என்ன?

Babar-Azam
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் மொத்தம் பங்கேற்ற 16 அணிகளில் தற்போது இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மெல்போர்ன் மைதானத்தில் மோத இருக்கின்றன. இந்நிலையில் இறுதிப்போட்டி நடைபெற இருக்கும் இவ்வேளையில் நேற்று பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.

PAK vs ENG Jose Buttler Babar Azam

- Advertisement -

அப்படி பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவரிடம் நிருபர்கள் எழுப்பிய ஒரு கேள்வி அவரை சற்று கோபமடைய செய்தது. அது தொடர்பான தகவலும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பாபர் அசாம் நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிக்க தயாராக இருந்தார்.

அப்போது பல்வேறு கேள்விகள் அவரிடம் எழுப்பப்பட்டு வந்த வேளையில் அதற்கெல்லாம் பதில் அளித்துக் கொண்டே வந்த அவரிடம் ஐபிஎல் விளையாடுவதில் உள்ள நன்மை பற்றி பேசுங்கள் அது உங்கள் அணிக்கும், உங்கள் அணியில் உள்ள வீரர்களுக்கும் உதவிகரமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எதிர்காலத்தில் ஏதேனும் ஐபிஎல் விளையாடும் நம்பிக்கை உங்களிடம் உள்ளதா? என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

Pak Players Team Fans

ஐ.பி.எல் தொடரின் ஆரம்பகட்ட சீசன்களிலேயே பாகிஸ்தான் அணி வீரர்கள் அந்த தொடரில் விளையாட தடை செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகிய நிலையில் இப்படி ஐபிஎல் குறித்த கேள்வி கேட்டதும் சற்று கடுப்பான பாபர் அசாம் பாகிஸ்தான் அணியின் மீடியா மேனேஜர் பக்கம் திரும்பி பார்த்தார்.

- Advertisement -

உடனே அவர் கோபம் அடைந்துள்ளார் என்பதை புரிந்து கொண்ட அந்த மேனேஜரும் உடனடியாக : தற்போது நாம் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் உள்ளோம். அதை குறித்து மட்டுமே கேள்வி கேளுங்கள். மற்றபடி எதையும் இந்த சந்திப்பில் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க : 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக டி20 கிரிக்கெட்டில் ரிட்டையராக வாய்ப்புள்ள 5 கேப்டன்களின் பட்டியல்

அதன் பின்னர் மீண்டும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பாபர் அசாம் பதிலளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார். இப்படி பாபர் அசாம் ஐபிஎல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதும் கடுப்பான விடயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement