இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி பிப்ரவரி 6ஆம் தேதி ஃகால் நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
ஆனால் அதற்கு தகுந்தார் போல் விளையாடாத அந்த அணி ஆஸ்திரேலியாவின் நல்ல பந்து வீச்சில் 257 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக தினேஷ் சந்திமல் 74, குசால் மெண்டிஸ் 85 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மேத்யூ குனேமான் 3, மிட்சேல் ஸ்டார்க் 3, நேதன் லயன் 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியா அபாரமாக பேட்டிங் செய்து 414 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலியா வெற்றி:
அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 156 ரன்கள் குவித்து இலங்கை மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பராக சாதனை படைத்தார். அவருடன் விளையாடி சதத்தை அடித்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 131 ரன்கள் குவித்து அசத்தினார். இலங்கைக்கு அதிகபட்சமாக பிரபத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதற்கடுத்ததாக விளையாடிய இலங்கை மீண்டும் தடுமாற்றமாகவே பேட்டிங் செய்து 231 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 76, குசால் மெண்டிஸ் 50 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக நேதன் லயன் 4, மேத்தியூ குனேமான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இறுதியில் 75 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு 20, உஸ்மான் கவாஜா 27*, மார்னஸ் லபுஸ்ஷேன் 26* ரன்கள் எடுத்தார்கள்.
ஒய்ட்வாஷ் வெற்றி:
அதனால் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா 2 – 0 (2) என்ற கணக்கில் இலங்கையை அதனுடைய சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து தோற்கடித்து கோப்பையை வென்றது. அத்துடன் 14 வருடங்கள் கழித்து இலங்கை மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று ஆஸ்திரேலியா சாதனையும் படைத்தது. கடைசியாக 2011ஆம் ஆண்டு இலங்கை மண்ணில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தது.
இதையும் படிங்க: ரச்சின் காயத்துக்கு பாகிஸ்தானின் அவசரமே காரணம்.. லதீப் விமர்சனம்.. துபாய்க்கு மாற்ற ரசிகர்கள் கோரிக்கை
மேலும் சமீபத்தில் இந்தியாவையும் தோற்கடித்த ஆஸ்திரேலியா வரும் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் உங்களையும் வீழ்த்த தயாராக உள்ளோம் என்று தென்னாப்பிரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதை ஆஸ்திரேலியா விடுத்ததோ இல்லையோ மைதானத்தில் இருந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் பேனர் வைத்து விடுத்துள்ளார்கள். மறுபுறம் சொந்த மண்ணில் இலங்கை பரிதாபமாக தோற்றது.