எனக்கும் சரி, அவருக்கும் சரி டெல்லி அணியில் தக்கவைக்கப்பட வாய்ப்பே இல்ல – அஷ்வின் வெளிப்படை

Ashwin
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 14-வது ஐபிஎல் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக வென்று சாதனை படைத்த நிலையில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் குறித்த பேச்சு தற்போதே எழுந்துள்ளன. அதன்படி மார்ச் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படும் 15-வது ஐபிஎல் தொடருக்காக ஏற்கனவே உள்ள அணிகளுடன் அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களை தலைமையாகக் கொண்ட இரண்டு அணிகள் சேர்ந்து மொத்தம் 10 அணிகள் இந்த தொடரில் விளையாட உள்ளது.

IPL
IPL Cup

இதன் காரணமாக தற்போது அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு விரைவில் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்திற்கு முன்னர் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்கும் என்கிற காரணத்தினால் தற்போது அனைத்து அணிகளும் தக்க வைக்கப்படும் வீரர்கள் குறித்து முடிவு செய்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் டெல்லி அணி 2 இந்திய வீரர்களாக ரிஷப் பண்ட் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோரையும் தக்கவைக்கும் என்று தெரிகிறது. அதேபோன்று வெளிநாட்டு வீரர்களாக ரபாடா மற்றும் நோர்க்கியா ஆகியோரை தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

iyer 1

இந்நிலையில் டெல்லி அணி தக்கவைக்கும் வீரர்கள் குறித்து தனது யூடியூப் சேனல் பேசிய அஷ்வின் சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : எனக்கு தெரிந்து டெல்லி அணிக்காக ஷ்ரேயாஸ் ஐயர் தக்க வைக்கப் பட வாய்ப்பு இல்லை. அதே போன்று அந்த லிஸ்டில் நானும் இருக்கக்கூடும். எங்கள் இருவருக்கும் தக்க வைக்கப் பட வாய்ப்பு இல்லை என்று தான் கருதுவதாக வெளிப்படையாக அஷ்வின் ஒப்புக்கொண்டார்.

- Advertisement -

இதையும் படிங்க :

இருப்பினும் அனுபவ வீரரான அஷ்வினை ஏலத்தில் எடுக்க அனைத்து அணிகளும் கடுமையான போட்டி அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement