சக வீரரை ஒருமையில் திட்டினாரா தமிழக வீரர் அஸ்வின்.. ஸ்டம்ப் மைக் மூலம் வெளியான பதிவு – நடந்தது என்ன?

Ashwin
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இரண்டாம் வாரத்தை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை மொத்தம் 25 லீக் போட்டிகள் முடிந்துள்ள வேளையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தாங்கள் விளையாடிய 5 போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் அணி கடைசியாக ஏப்ரல் 10-ஆம் தேதி ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடி இருந்தது. அந்த போட்டியின் போது மூன்று விக்கெட் வித்தியாசத்தில் முதல் தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் அணி இந்த தொடரில் தங்களது முதல் சறுக்களை சந்தித்தது.

- Advertisement -

அந்த போட்டியில் பந்துவீச்சாளர்களின் மெத்தனமான செயல்பாடே போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணமாகவும் பார்க்கப்பட்டது. குஜராத் அணிக்கு எதிரான அந்த ஆட்டத்தில் தமிழக வீரர் அஸ்வின் நான்கு ஓவர்களை வீசி 40 ரன்களை விட்டுக்கொடுத்து மட்டுமின்றி ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றாமல் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

அதிலும் குறிப்பாக போட்டியின் முடிவுக்கு முக்கியமான 17-ஆவது ஓவரை வீசிய அவர் அந்த ஓவரில் 17 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதன்மூலம் குஜராத் அணிக்கு வெற்றிக்கான திருப்புமுனையும் ஏற்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது ராஜஸ்தான் அணியை சேர்ந்த சக வீரர் ஒருவரை அஸ்வின் தரக்குறைவாக பேசியதாக ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அதில் 17வது ஓவரின் முதல் பந்தினை வீசிய அஸ்வின் அதன் பிறகு பீல்டர்களை இடம் மாற்றி நிற்க சொல்லி கேப்டன் சஞ்சு சாம்சனிடம் சொல்கிறார். அதிலும் குறிப்பாக : “பின்னாடி போய் நிக்க சொல்லு அந்த சனியன” என்று கூறுகிறார்.

இதையும் படிங்க : ஆர்.சி.பி அணியில் இருந்து வெளியேறிய மேக்ஸ்வெல்.. என்ன காரணம்? – இருக்குற நிலைமைல இதுவேறயா?

அதன் பிறகு சஞ்சு சாம்சனும “பின்னாடி நில்லடா டேய்” என கூறுகிறார். இப்படி ஒரு ஆடியோ ஸ்டம்ப் மைக் மூலம் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இருப்பினும் அஸ்வின் யாரை குறிப்பிட்டு திட்டினார் என்பது குறித்த தகவல் தெரியவில்லை. மேலும் உண்மையிலேயே அவர் இப்படி திட்டினாரா? போட்டியில் இது போன்றெல்லாம் நடக்குமா? என்றும் ரசிகர்கள் இந்த தகவலை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement