சி.எஸ்.கே அணியில் இம்முறை ராயுடுவின் இடத்திற்கு சி.எஸ்.கே அந்த பெங்களூரு வீரரை வாங்குவாங்க – அஷ்வின் கணிப்பு

Ashwin
- Advertisement -

தமிழக கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த சில ஆண்டுகளாகவே தனது யுடியூப் சேனல் மூலம் கிரிக்கெட் குறித்த பல்வேறு தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அவ்வப்போது நடைபெற்ற முடியும் கிரிக்கெட் தொடர்கள் மட்டுமின்றி ஐபிஎல் தொடரில் நடக்கப்போகும் மாற்றங்கள் என பல்வேறு சுவாரசியமான விடயங்களை அவர் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

அந்த வகையில் எதிர்வரும் 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் குறித்தும் சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களை வாங்க முனைப்பு காட்டும் என்பது குறித்தும் பல்வேறு தகவல்களை அவர் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் கடந்த ஆண்டு சென்னை அணியிலிருந்து ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக அவரது இடத்தை நிரப்ப எந்த வீரரை சென்னை அணி தேர்வு செய்யும்? என்பது குறித்த தனது கணிப்பினை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே ராயுடு ஓய்வினை அறிவித்த பிறகு டெல்லி அணியில் இருந்து வெளியேறிய மணிஷ் பாண்டே அந்த இடத்திற்கு சரியான வீரராக இருப்பார் என்றும் அதனால் சென்னை அணி அவரை ஏலத்தில் வாங்க முனைப்பு காட்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். ஆனால் தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில் :

என்னை பொருத்தவரை சிஎஸ்கே அணி ராயுடுவின் இடத்தில் விளையாட கருண் நாயரை ஏலத்தில் வாங்க முனைப்பு காட்டும். ஏனெனில் மிடில் ஆர்டருக்கு ஷாருக்கான் போன்ற அதிரடி வீரர்கள் செட்டாக மாட்டார்கள். எனவே அந்த இடத்தை பூர்த்தி செய்ய சுழற்பந்து வீச்சை நன்றாக எதிர்கொண்டு ஆடும் ஒரு பேட்ஸ்மேன் அவர்களுக்கு தேவை.

- Advertisement -

அந்த வகையில் பார்க்கையில் கருண் நாயர் சையத் முஸ்டாக் அலி தொடரில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார். அதனால் அவரை மஞ்சள் நிற உடையில் பார்க்க வாய்ப்பு இருக்கிறது. அதோடு சிஎஸ்கே அணி பெரும்பாலான போட்டிகளை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவதால் சுழற்பந்து வீச்சை சமாளித்து ஆடும் பேட்ஸ்மேன்கள் மீது அதிக ஆர்வம் காட்டும் தோனியும் அதையேதான் விரும்புவார்.

இதையும் படிங்க : பெங்களூரு பிட்ச்ல இதை மட்டும் பண்ணா போதும் இந்திய அணி ஈஸியா ஜெயிச்சிடலாம் – விவரம் இதோ

அந்த வகையில் ஏற்கனவே டேஸ்ட் கிரிக்கெட்டில் சென்னை மைதானத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முச்சதம் அடித்த கருண் நாயருக்கு சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. அதேபோன்று ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் என அனைத்து வகையான ஷாட்களையும் அவரால் மிகச் சிறப்பாக விளையாட முடியும். என்னை பொருத்தவரை அவரே ராயுடு இடத்திற்கு தேர்வாக வாய்ப்பு இருப்பதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Advertisement