ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்கள் மத்தியில் பாராட்டினை பெற்று வருகிறது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி ஆறு வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கின்றது. இனிவரும் ஐந்து போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றால் கூட ஆர்.சி.பி அணி எளிதாக பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பினை எட்டிவிடும்.
இந்த சீசனில் நாங்க வாங்கிய பெஸ்ட் பிளேயர் இவர்தான் : ஆன்டி பிளவர்
இதனால் இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக ஆர்.சி.பி அணிக்கும் வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் ஆர்.சி.பி அணி சரியான கலவையில் வீரர்களை தேர்வு செய்துள்ளதால் அந்த அணி வெற்றி நடைபோட்டு வருகிறது. கடைசியாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது வெற்றி பெற்று அசத்தியிருந்தது.
இந்நிலையில் இந்த தொடரில் பல்வேறு சிறந்த வீரர்கள் தங்களது அணியில் வாங்கப்பட்டிருந்தாலும் அதில் மிகச் சிறந்த தேர்வு க்ருனால் பாண்டியா தான் என அந்த அணியின் பயிற்சியாளர் ஆன்டி பிளவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
நாங்கள் மெகா ஏலத்தில் தேர்வு செய்த மிகவும் முக்கியமான வீரர் என்றால் அது க்ருனால் பாண்டியா தான். ஏனெனில் ஆல்ரவுண்டான அவர் பேட்டிங், பௌலிங், பீல்டிங் என்பது மட்டுமின்றி அனுபவம் கொண்ட வீரராகவும் இருப்பதால் அவரது வருகை எங்கள் அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஐபிஎல் தொடரில் ஒரு அணியையும் வழிநடத்தியுள்ள அனுபவம் கொண்ட அவர் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.
எங்கள் அணியில் உள்ள அனைவரிடமும் நல்ல சூழலை ஏற்படுத்துகிறார். அதுமட்டும் இன்றி பயிற்சியாளர்களுடன் சரியான முறையில் ஆலோசனைகளை பெற்று களத்தில் அதனை செயல்படுத்தி வருகிறார். இப்படி அனைத்தையும் ஒருங்கிணைத்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் இந்த தொடரில் நாங்கள் வாங்கிய மிகச் சிறந்த வீரர் என்று கூறுவேன் என க்ருனால் பாண்டியாவை ஆன்டி ப்ளவர் பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க : எங்க டீம்ல இருக்குற அந்த 4 பேட்ஸ்மேனும் ரொம்ப டேஞ்சர்.. எனக்கே அவங்கள பாத்தா பயம் – பேட் கம்மின்ஸ் கருத்து
34 வயதான க்ருனால் பாண்டியா இந்த சீசனில் ஆர்.சி.பி அணிக்காக பேட்டிங்கில் 24 ரன்களை மட்டுமே எடுத்திருந்தாலும் பந்துவீச்சில் முக்கியமான வேளைகளில் சிறப்பாக செயல்பட்டு மொத்தமாக 12 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.