கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்தியிருந்தது. அதன் காரணமாக கம்மின்ஸ் தலைமையிலான அந்த அணி இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரிலும் ஆதிக்கத்தை செலுத்தி விளையாடும் என்று பலராலும் பேசப்பட்டது. அதன்படியே இந்த தொடரின் ஆரம்ப போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய அந்த அணி மிகச் சிறப்பாக இந்த தொடரை தொடங்கியிருந்தது.
அவங்கள பாத்தா எனக்கே பயமா தான் இருக்கும் : பேட் கம்மின்ஸ்
ஆனாலும் அடுத்தடுத்து நடைபெற்ற நான்கு போட்டிகளில் தொடர்ச்சியான தோல்வியை சந்தித்து மோசமான நிலையை சந்தித்தது. அதன் பிறகு தற்போது வரை எட்டு போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி வெறும் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று நான்கு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தினை பிடித்து மோசமான நிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் அவர்களது ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் இன்று ஏப்ரல் 25-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் சிஎஸ்கே அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடரில் தங்களது அணிக்காக விளையாடும் பேட்ஸ்மேன்கள் குறித்தும் அவர்களது ஆக்ரோஷமான அணுகுமுறை குறித்தும் பேட் கம்மின்ஸ் சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : எங்கள் அணி இந்த தொடரின் முதல் போட்டியில் 280 ரன்கள் அடித்தபோது அட்டாக்கிங் கிரிக்கெட் என்று பலரும் கூறினார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை அது அட்டாக்கிங் கிரிக்கெட் அல்ல சூழலை அறிந்து பேட்ஸ்மேன்கள் விளையாடுகிறார்கள். எங்களது அணியில் உள்ள வீரர்கள் பெரும்பாலும் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடவே ஆசைப்படுகிறார்கள். எனவே எந்த ஒரு பேட்ஸ்மேன் சிறப்பாக ஆடினாலும் 30 பந்துகளில் 100 ரன்கள் வரை அடிக்கக்கூடும்.
அந்த அளவிற்கு எங்களுடைய பேட்டிங் லைன் அப் அதிரடியான ஒன்றாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக அபிஷேக் சர்மா டிராவிஸ் ஹெட், நிதீஷ் ரெட்டி, கிளாஸன் ஆகிய நான்கு வீரர்களை பார்த்தால் அவர்கள் எப்போதுமே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள். அவர்களுக்கு எதிராக நான் தனிப்பட்ட முறையில் விளையாடுவதை நினைத்துப் பார்த்தாலே பயமாகத்தான் இருக்கிறது. அந்த அளவிற்கு அவர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள்.
இதையும் படிங்க : 14 ஒய்ட்.. உங்க தப்பை மறைக்க அவங்கள குறை சொல்லாதீங்க.. ராஜஸ்தான் பராக்கை சாடிய சேவாக், மிஸ்ரா
தற்போதுள்ள அணியில் அனைவருமே சிறப்பான வீரர்களாக இருந்தும் இந்த தொடர் எங்களுக்கான ஒன்றாக அமையவில்லை ஆனால் இனிவரும் போட்டிகளில் எங்களது முழு பலத்தையும் வெளிப்படுத்துவோம். அதேபோன்று பௌலிங்கிலும் திறமையான வீரர்கள் பலர் வந்துள்ளனர் எனவே நிச்சயம் இந்த சீசனை நல்லபடியாக முடிக்க முடியும் என பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.