யுஸ்வேந்திர சாஹலை போதையில் கட்டிப்போட்டது இந்த 2 வெளிநாட்டு வீரர்கள் தானாம் – வெளியான தகவல்

Chahal
- Advertisement -

கடந்த சில தினங்களாகவே சமூகவலைதளத்தில் அனைவரது மத்தியிலும் அதிகம் பேசப்படும் விடயமாக சாஹலுக்கு மும்பை அணியில் இருந்த போது நடைபெற்ற கொடுமை பேசுபொருளாக மாறியுள்ளது. ஏனெனில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக தற்போது இருந்துவரும் சாஹல் கடந்த பல ஆண்டுகளாக பெங்களூர் அணிக்காக விளையாடிய வேளையில் இந்த ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

Chahal RR

- Advertisement -

இதுவரை இத்தொடரில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் ஆரம்ப கால கட்டத்தில் மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடும் போது நடைபெற்ற ஒரு நிகழ்வை அவர் வெளிப்படையாக பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி அவர் கூறுகையில் :

மும்பை அணிக்காக அறிமுகமான போது சக வீரர்கள் என்னை சற்று பயப்படும் அளவிற்கு சில செயல்களைச் செய்தனர். அதிலும் குறிப்பாக பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி நடைபெற்று முடிந்த பிறகு அன்றைய நாள் இரவு அணி வீரர்களுக்கு இடையே கெட் டு கெதர் ஒன்று வைக்கப்பட்டது. அப்போது நான் ஹோட்டலில் இருந்தேன்.

symonds

அந்த வேளையில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய வெளிநாட்டு வீரர்கள் தன் கை கால்களை கட்டி போட்டு வாயிலும் டேப் ஒட்டி விட்டனர். ஆனால் அவர்களின் மிதமிஞ்சிய போதையின் காரணமாக என்னை பற்றிய நினைவே கிடையாது. காலையில் ஹோட்டலில் இருந்த ஊழியர்களை என்னை மீட்டனர் என்று தெரிவித்தார். இப்படி அளவுக்கு மீறிய போதையில் அவரை இவ்வாறு துன்புறுத்தியவர்களை தண்டிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் இந்த விடயம் பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் அப்படி அவரை போதையில் கட்டிப் போட்டது யார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மற்றும் நியூசிலாந்து முன்னாள் வீரர் ஜேம்ஸ் பிராங்க்ளின் தான் அவரை கட்டிப்போட்டு வாயில் டேட் ஓட்டியதாக தெரியவந்துள்ளது. மேலும் தற்போது இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் பயிற்சியாளராக இருக்கும் பிராங்க்லின்-யிடம் இது குறித்த விசாரணையும் நடைபெற உள்ளதாக அந்த கவுண்டி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : பிடித்தது கோல்ட், சொதப்புவது கேப்டன்ஷிப் ! நட்சத்திர வீரரை கலாய்க்கும் ரசிகர்கள் – என்ன நடந்தது

இப்படி சைமண்ட்ஸ் மற்றும் பிராங்கிளின் ஆகியோர் செய்த இச்செயல் தற்போது மட்டும் நடந்திருந்தால் நிச்சயம் அவர்களுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement