- Advertisement -
இந்திய கிரிக்கெட்

உலகின் மிகப்பெரிய மைதானத்திற்கு “நரேந்திர மோடியின் பெயரை” வைக்க இதுவே காரணம் – உள்துறை அமைச்சர்

அகமதாபாத் நகரில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் இதற்கு முன்னர் சர்தார் பட்டேல் மைதானம் என்றே கூறப்பட்டு வந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 3 ஆவது டெஸ்ட் போட்டி தொடங்கும் சிறிது நேரத்திற்கு முன்ப மைதானத்தின் பெயர் நரேந்திர மோடி மைதானம் என்று மாற்றியமைக்கப்பட்டது. இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மைதானத்தை திறந்து வைத்தார். அவருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனிருந்தார்.

பின்னர் பேசிய ராம்நாத் கோவிந்த் : “இந்த கிரிக்கெட் மைதானம் பாரத பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராகவும் குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் இருந்தபோது புது மைதானத்திற்கான கட்டுமான பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டது” என்று கூறினார். அவருக்கு பின்பு உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ” இந்த கிரிக்கெட் மைதானம் நரேந்திர மோடியின் நெடுநாள் கனவு திட்டம். எனவே அவரது பெயரை வைக்க முடிவு செய்தோம். அதே சமயம் மாண்புமிகு வல்லபாய் படேல் அவர்களின் பெயர் புறக்கணிக்கப்பட கூடாது என்பதற்காகவே மைதானத்தின் உள் விளையாட்டு வளாகத்துக்கு அவரது பெயரை வைத்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

- Advertisement -

வழக்கமாக தேசிய தலைவர்கள் இறந்த பின்பு அவர்களது பெயர்கள் அரங்குகளுக்கு சூட்டப்படுவது வழக்கமாகும். ஆனால், இது கிரிக்கெட்டில் அப்டியே உல்டாவாக காலகாலமாக நடந்து வருகின்றது. மும்பையின் பிராபோர்ன் மற்றும் வான்கடே ஸ்டேடியங்களின் பெயர்கள் சம்பந்தப்பட்ட நபர்கள் உயிருடன் இருந்த காலத்திலேயே அவர்களது பெயர்கள் மைதானங்களுக்கு பெயிரிடப்பட்து.

நவி மும்பையின் டி ஒய் பாட்டீல் ஸ்டேடியம், பெங்களூரூ எம் சின்னசாமி ஸ்டேடியம்,
மொஹாலி ஐ.எஸ்.பிந்த்ரா ஸ்டேடியம் மற்றும் நமது சென்னையின் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் இவை அனைத்திற்கும் இதே போல சம்பந்தப்பட்ட நபர்கள் இருந்த போதே அவர்களது பெயர்கள் மைதானங்களுக்கு பெயரிடப்பட்டது.

ஒரு மைதானத்திற்கு அரசியல்வாதியின் பெயரே இந்திய விளையாட்டுத் துறையில் குறிப்பாக அதிலும் கிரிக்கெட் துறையில் காலம் காலாமாக வைத்து வருவது பொதுவான நடைமுறையாகவே உள்ளது.எவ்வளவோக விளையாட்டு ஜாம்பவான்கள் இருக்கின்ற வேளையில் ஏன் அவர்களது பெயரை உபயோகிக்க கூடாது என்கிற கேள்வி ரசிசர்களால் தற்பொழுது சமூக வலைதளங்களில் எழத் தொடங்கியுள்ளது.

- Advertisement -
Published by