ஆர்சிபி தோல்வி காயத்தில் உப்பை தடவிய ராயுடு.. சிஎஸ்கே வைத்து வெளியிட்ட பதிவால்.. ரசிகர்கள் கோபம்

Ambati Rayudu 5
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எலிமினேட்டர் போட்டியுடன் வெளியேறியதை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்றே சொல்லலாம். ஏனெனில் மே 18ஆம் தேதி நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு நடப்பு சாம்பியன் சென்னையை வீட்டுக்கு அனுப்பி 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.

அப்போட்டியில் கிட்டத்தட்ட வெற்றி உறுதியானதும் சின்னசாமி மைதானத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்களை பார்த்து விராட் கோலி வாய் மீது கை வைத்து அமைதியாக இருக்குமாறு சொன்னார். அத்துடன் போட்டி முடிந்ததும் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் தோனிக்கு கை கொடுக்க நேரமில்லாத அளவுக்கு ஆர்சிபி வீரர்கள் வெற்றியை வெறித்தனமாக கொண்டாடினார்கள்.

- Advertisement -

உப்பை தடவிய ராயுடு:
மறுபுறம் மைதானத்திற்கு வெளியே தெருக்களில் தோல்வியால் வெறுப்பில் அமைதியாக சென்று கொண்டிருந்த சிஎஸ்கே ரசிகர்களை ஆர்சிபி ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி கலாய்த்தனர். மேலும் தோல்விக்கு பின் வீட்டுக்கு திரும்பிய சிஎஸ்கே அணியின் பேருந்துக்கு முன்பாகவும் ஆர்சிபி ரசிகர்கள் தங்களுடைய அணியின் கொடியை காண்பித்து கலாய்த்தனர்.

அவை அனைத்தையும் தாண்டி கொண்டாட்டம் என்ற பெயரில் சிஎஸ்கே பெண் ரசிகைகளிடம் சில ஆர்சிபி ரசிகர்கள் தகாத முறையில் நடந்து கொண்ட வீடியோக்களும் வைரலாகின. அந்த சூழ்நிலையில் மே 22ஆம் தேதி நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தானிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி தோல்வியை சந்தித்தது. அதனால் தொடர்ந்து 17வது வருடமாக ஐபிஎல் கோப்பை வெல்லாமல் அந்த அணி வெளியேறியது. அதன் காரணமாக தங்களை கலாய்த்த ஆர்சிபி ரசிகர்களை தற்போது தேடிச்சென்று சிஎஸ்கே ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

- Advertisement -

அத்துடன் “சிஎஸ்கே அணியை தோற்கடித்து வெறித்தனமாக கொண்டாடுவதால் மட்டும் கோப்பையை வெல்ல முடியாது” என்று ஆர்சிபி அணிக்கு முன்னாள் வீரர் அம்பாத்தி ராயுடு அறிவுரை வழங்கினார். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2023 ஐபிஎல் கோப்பையை வென்ற பின் பேருந்தில் பயணித்த போது சிஎஸ்கே அணியுடன் எடுத்த புகைப்படத்தை ராயுடு தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஜடேஜா மற்றும் ரகானே ஆகியோர் சிஎஸ்கே 5வது கோப்பையை வென்றதை குறிக்கும் வகையில் 5 விரல்களையும் காட்டுகின்றனர்.

இதையும் படிங்க: இந்தியாவின் பயிற்சியாளரா வரச்சொல்லி பிசிசிஐ கேட்டாங்க.. ஆனா இந்த காரணத்தால் மறுத்துட்டேன்.. பாண்டிங் ஓப்பன்டாக்

குறிப்பாக “5 முறை சாம்பியன்களிடம் இருந்து ஒரு அன்பான நினைவூட்டல். சில நேரங்களில் பொதுவான நினைவூட்டல் தேவைப்படுகிறது” என்ற தலைப்புடன் ராயுடு இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதாவது இந்த வருடம் தோல்வியை சந்தித்தாலும் சிஎஸ்கே உங்களைப் போல் அல்லாமல் இப்போதும் 5 கோப்பைகளை வென்ற சாம்பியன் என்று ஆர்சிபி ரசிகர்களின் காயத்தில் உப்பை தடவும் வகையில் ராயுடு பதிவிட்டுள்ளார். இது அந்த ரசிகர்களை மேலும் கோபமடைய வைத்துள்ளது.

Advertisement