அஹமதாபாத், லக்னோ அணிகள் செலக்ட் செய்துள்ள வீரர்கள் யார்? – கேப்டன் யார், எத்தனை கோடிகள்?

Pandya
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான அனைத்து வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த வருடம் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 நகரங்களை மையமாகக் கொண்ட புதிய 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்த வருடம் வீரர்களுக்கான மெகா ஏலம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு முன்பாக ஐபிஎல் தொடரில் ஏற்கனவே உள்ள பழைய 8 அணிகள் தாங்கள் விரும்பிய 4 அதிகபட்ச வீரர்களை தக்க வைத்துக் கொண்ட விவரங்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளனர்.

IPL
IPL Cup

புதிய அணிகள்:
இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக புதிதாக தோற்றுவிக்கப்பட்ட லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் தாங்கள் விரும்பும் 3 வீரர்களை அதிகபட்சமாக தேர்வு செய்து கொள்ள ஐபிஎல் நிர்வாகம் ஏற்கனவே முன்னுரிமை அளித்திருந்தது. இதையடுத்து கேப்டன் உள்ளிட்ட தங்கள் அணிக்கான 3 ஆணிவேர் வீரர்களை தேர்வு செய்ய இந்த 2 அணிகளும் கடந்த சில மாதங்களாகவே தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வந்தன.

- Advertisement -

அதன் இறுதிகட்டமாக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் தேர்வு செய்துள்ள 3 வீரர்கள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதை பற்றி பார்ப்போம்:

Rahul

1. லக்னோ : சுமார் 7090 கோடிகள் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள லக்னோ ஐபிஎல் கிரிக்கெட் அணியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் கே எல் ராகுல், இளம் வீரர் ரவி பிஸ்னோய் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் விளையாட உள்ளார்கள் என ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன. அது தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதில் கேஎல் ராகுல் தங்கள் அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார் என லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோனேகா அறிவித்துள்ளார். அந்த விவரம் இதோ:

1. கேஎல் ராகுல் (கேப்டன்) – 17 கோடிகள்.
2. மார்கஸ் ஸ்டோனிஸ் – 9.2 கோடிகள்
3. ரவி பிஷ்னோய் – 4 கோடிகள்

- Advertisement -

மெகா ஏலத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 90 கோடிகளில் இந்த 3 வீரர்களுக்கு செலவிட்ட தொகை போக எஞ்சிய வீரர்களை தேர்வு செய்ய லக்னோ அணியிடம் தற்போது 59.8 கோடிகள் மீத ஏலத்தொகை உள்ளது.

ahmedabad

அஹமதாபாத் :
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரை மையமாக கொண்டு 5625 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள “அகமதாபாத் ஐபிஎல் அணி” தாங்கள் விரும்பி தேர்வு செய்துள்ள 3 வீரர்கள் பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக “குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரும் இந்தியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டருமான ஹர்திக் பாண்டியா” அறிவிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

அத்துடன் வளர்ந்து வரும் இந்திய வீரராக விளங்கும் நட்சத்திர இளம் வீரர் சுப்மன் கில் அந்த அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருடன் உலகின் நம்பர் ஒன் டி20 பந்து வீச்சாளராக கருதப்படும் ஆப்கானிஸ்தானின் ரசித் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : எவ்ளோ ட்ரை பண்ணிட்டோம். ஆனால் மீண்டும் அதே தவறு – தோல்வி குறித்து ராகுல் வேதனை

அஹமதாபாத் அணி வீரர்கள் மற்றும் அவர்களின் சம்பளம் இதோ:
1. ஹர்டிக் பாண்டியா (கேப்டன்) : 15 கோடிகள்
2. ரசித் கான் : 15 கோடிகள்
3. சுப்மன் கில் : 8 கோடிகள்

இந்த 3 வீரர்களுக்கு செலவிடப்பட்ட தொகை போக மீதம் உள்ள 52 கோடிகளுடன் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் அகமதாபாத் அணி நிர்வாகம் களமிறங்க உள்ளது.

Advertisement