அதை நெனச்சா பெருமையா இருக்கு.. செமி ஃபைனலை அங்க தவற விட்டோம்.. ஆப்கானிஸ்தான் கேப்டன் பேட்டி

Shahidhi AFG
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நவம்பர் 10ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா தோற்கடித்தது. அப்போட்டியில் தென்னாபிரிக்காவை 400 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் செமி ஃபைனல் செல்லலாம் என்ற அசாத்தியமான சூழ்நிலையில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 245 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக இளம் வீரர் ஓமர்சாய் 97* ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்சி 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து 245 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு டீ காக் 41, தெம்பா பவுமா 23, மார்க்ரம் 25, க்ளாஸென் 10, மில்லர் 24 என முக்கிய பேட்ஸ்மேன்களை குறைந்த ரன்களில் அவுட்டாக்கி ஆப்கானிஸ்தான் முடிந்தளவுக்கு போராடியது.

- Advertisement -

பெருமை படுகிறோம்:
ஆனாலும் இலக்கு குறைவாக இருந்ததால் வேன் டெர் டுஷன் 76*, பெலுக்வியோ 39* ரன்கள் எடுத்து 47.3 ஓவரில் தென்னாப்பிரிக்காவை வெற்றி பெற வைத்தனர். அதன் காரணமாக அதிகபட்சமாக முகமது நபி மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் ஆப்கானிஸ்தான் தோல்வியை சந்தித்து உலக கோப்பையிலிருந்து வெளியேறியது. இருப்பினும் 1992, 1996, 2019 சாம்பியன்கள் பாகிஸ்தான், இலங்கை மற்றும் இங்கிலாந்தை தோற்கடித்த அந்த அணி இத்தொடரில் மிகப்பெரிய எழுச்சி கண்டு அனைவரின் பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில் 5 கோப்பைகளை வென்று மகத்தான அணியாக திகழும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மேக்ஸ்வெல் அதிரடியால் கையில் வைத்திருந்த வெற்றியை நழுவ விட்டது செமி ஃபைனல் வாய்ப்பை பறித்ததாக ஆப்கானிஸ்தான் கேப்டன் சாகிதி தெரிவித்துள்ளார். ஆனாலும் இத்தொடரின் கடைசி போட்டி வரை முடிந்தளவுக்கு முழுமூச்சுடன் போராடியதை நினைத்து பெருமைப்படுவதாக கூறும் அவர் தங்களுக்கு வருங்காலம் பிரகாசமாக இருப்பதாக தெரிவித்து பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கேப்டனாக எங்களுடைய செயல்பாடுகளால் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வொரு போட்டியிலும் தொடரின் கடைசி வரையிலும் நாங்கள் வெற்றிக்காக போராடினோம். இது வருங்காலத்தில் எங்களுக்கு நல்ல பாடங்களை கொடுத்துள்ளது. குறிப்பாக இத்தொடரில் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் விளையாடிய விதம் பெருமையளிக்கிறது. இத்தொடருக்கு முன்பாக நாங்கள் உட்கார்ந்து பலவீன புள்ளிகளைப் பற்றி பேசினோம். அதன் பலனாக எங்களுடைய பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாடினார்கள் என்பதை பார்த்தீர்கள்”

இதையும் படிங்க: செமி ஃபைனல் வாய்ப்பை பறித்த ஒற்றை தவறு.. போராடி வெளியேறிய ஆப்கானிஸ்தான்.. தெ.ஆ வெற்றி

“அந்த நேர்மறையான அம்சத்தை நாங்கள் வருங்காலமாக எடுத்துக் கொள்கிறோம். நாங்கள் சிறந்த சுழல் பந்து வீச்சுத் துறையை கொண்டுள்ளோம் என்பதை அனைவரும் அறிவார்கள். எனவே இதே போல் விளையாடினால் நாங்கள் நல்ல அணியாக உருவெடுப்போம். உலகத்திற்கு இத்தொடரின் வாயிலாக நாங்கள் நல்ல அணி என்ற செய்தியை கொடுத்துள்ளோம். குறிப்பாக பெரிய அணிகளுக்கு எதிராக நாங்கள் சிறப்பாக விளையாடி கடைசி வரை போராடினோம். இருப்பினும் எங்களுடைய கையிலிருந்த ஆஸ்திரேலியா போட்டி கைநழுவி போனது” என்று கூறினார்.

Advertisement