ஐபிஎல் விரிவாக்கம் சரி ஆனால் அதை மட்டும் செய்யாதீங்க – கோரிக்கையுடன் ஆஸி ஜாம்பவான் கேள்வி

Ganguly-ipl
IPL MI
- Advertisement -

ரசிகர்களை கவர்வதற்காக கடந்த 2005இல் துவங்கப்பட்ட 20 ஓவர் போட்டிகள் அதுவரை நடைபெற்ற டெஸ்ட், ஒருநாள் போட்டிகளை பின்னுக்குத்தள்ளி நம்பர் ஒன் கிரிக்கெட்டாக மாறியது. அதை பார்த்து கடந்த 2008இல் இந்திய கிரிக்கெட் வாரியம் துவங்கிய ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் பல பரிணாமங்களை கண்டு இன்று உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்கள் எதிர்பாராத திரில்லர் முடிவுகளை கொடுப்பதால் உலக கோப்பைகளை விட தரத்தில் மிஞ்சியுள்ள ஐபிஎல் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான கோடிகளை வருமானமாக கொட்டிக் கொடுக்கிறது.

- Advertisement -

அதனால் உலக கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அங்கமாக உருவாகியுள்ள ஐபிஎல் தொடரின் 2023 – 2027 ஒளிபரப்பு உரிமை 48,390 கோடிகளுக்கு ஏலம் போனது. அதன் காரணமாக என்எப்எல் தொடருக்கு அடுத்தபடியாக ஈபிஎல், என்பிஏ போன்ற இங்கிலாந்து, அமெரிக்க நாடுகள் நடத்தும் கால்பந்து, கூடைப்பந்து தொடர்களை முந்தி உலகில் அதிக பணத்தை கொடுக்கும் 2-வது விளையாட்டு தொடராக ஐபிஎல் சாதனை படைத்துள்ளது. இதை மேலும் வளர்க்க நினைக்கும் பிசிசிஐ வரும் 2025 முதல் 94 போட்டிகள் கொண்ட தொடராக ஐபிஎல் தொடரை விரிவு படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது.

ஆபத்தாக்கும் ஐபிஎல்:
இதனால் உலக அளவில் கிரிக்கெட் நம்பர் ஒன் விளையாட்டு தொடராக உருவாவதற்கும் இரு மடங்கு பணம் கிடைப்பதற்கும் பிரகாசமான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. ஆனால் இந்த அபரித வளர்ச்சி சர்வதேச அளவில் நடைபெறும் நிறைய இருதரப்பு தொடர்களை பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த வேளையில் அடுத்ததாக ஒரு வருடத்திற்கு 2 ஐபிஎல் நடக்கப் போகிறது என்ற பேச்சுகளும் அடிபட்டு வருகின்றன. இதுபோக ஐபிஎல் தொடரில் அணிகளை வைத்திருக்கும் உரிமையாளர்கள் துபாய் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் தங்களது கிளை அணிகளை வாங்கியுள்ளார்கள்.

T2 World Cup vs IPL ICC vs BCCI

அந்த 2 புதிய டி20 தொடர்களும் வரும் 2023 ஜனவரி நடைபெற உள்ளது. அதற்காக அந்த மாதத்தில் ஆஸ்திரேலியாவில் பங்கேற்க இருந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்கா பகிரங்கமாக ரத்து செய்துள்ளது. அதனால் ஏற்கனவே மறைமுகமாக ஒரு வருடத்திற்கு 2 ஐபிஎல் கிட்டத்தட்ட நடைபெறத் தொடங்கி விட்டது. இந்நிலையில் ஐபிஎல் விரிவடைவது நல்லதுதான் ஆனால் ஒரு வருடத்திற்கு 2 ஐபிஎல் என்பது மிகவும் ஆபத்தானது என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் கவலை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. ” நான் இதை ஆத்திரமூட்டும் அர்த்தத்தில் சொல்லவில்லை. இருப்பினும் இது நியாயமான கேள்வி இல்லையா? 2 ஐபிஎல் நடந்தால் அது ஆபத்தானது என்று நான் நம்புகிறேன். அது சர்வதேச கிரிக்கெட்டில் மேலும் ஊடுருவ தொடங்கும். இது அந்தந்த நாடுகளில் உள்ள உள்நாட்டு போட்டிகளையும் சேதப்படுத்தும். மேலும் அது இந்தியா அவர்களின் மார்க்கெட்டை உருவாக்க உதவாது. அது இருவழி தெரு போல் தோன்றவில்லை” என்று கூறியதுடன் 2 ஐபிஎல் தொடரை நடத்தக்கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Gilchrist

வீரர்களுக்கு கேள்வி:
இத்துடன் ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட அனைத்து வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்கிறார்கள் ஆனால் தங்களது நாட்டில் நடைபெறும் பிக்பேஷ் உட்பட இதர டி20 தொடரில் இந்திய வீரர்கள் பங்கேற்காதது ஏன் என்றும் ஆடம் கில்கிறிஸ்ட் கேள்வி எழுப்பியுள்ளார். பிசிசிஐயை அனுமதி மறுக்கிறது என்பதை விட இந்திய வீரர்கள் வெளிநாட்டில் விளையாட ஆர்வம் காட்டுவதில்லை எனக்கூறும் அவர் அது நடந்தால் இன்னும் டி20 போட்டிகள் சுவாரசியமாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி 6 ஐபிஎல் தொடரில் விளையாடி டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு கேப்டனாக சாம்பியன் பட்டம் வென்ற அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட்டுக்கு ஐபிஎல் மிகச்சிறந்த தளத்தை கொடுத்துள்ளது. அதில் நானும் ஆறு வருடங்கள் விரும்பி விளையாடினேன். இருப்பினும் என்னை ஐபிஎல்க்கு எதிரானவர் என்று செய்தியாளர்கள் எழுதுவதை நான் விரும்பவில்லை. ஆனால் பிக்பேஷ் தொடரில் இந்திய வீரர்கள் ஏன் விளையாடுவதில்லை. ஐபிஎல் போன்ற ஒரு சில தொடர்களில் மட்டும் ஏன் உலகின் அனைத்து நாட்டு வீரர்களும் விளையாடுகின்றனர்? இதர டி20 தொடரில் இந்திய வீரர்கள் விளையாடுவதில்லை”

இதையும் படிங்க : INDvsWI : அதிரடியில் மிரட்டக்கூடிய இவரு டி20 தொடரில் ஆடுவாரு – வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

“உலகின் முதன்மை டி20 தொடரான ஐபிஎல் தொடரில் விளையாடுவது சிறந்த அனுபவம். ஆனால் அதற்காக மற்ற நாடுகளில் நடக்கும் போட்டிகளில் அனைவரும் பங்கேற்பது முக்கியம். இதர தொடர்களில் இந்திய வீரர்கள் விளையாடினால் மிகவும் சிறப்பாக இருக்கும். அப்படி நடந்தால் ஐபிஎல் தொடரின் தனித்துவம் குறையும் என்று நான் நினைக்கவில்லை. சொல்லப்போனால் அது மவுசை அதிகப்படுத்தும்” என்று கூறினார்.

Advertisement