வீடியோ : ஏ.பி.டி ஆட்டமிழந்ததும் விரக்தியில் சேரை கையால் தாக்கிய – அவரது செல்ல மகன்

Abd
- Advertisement -

ஐபிஎல் தொடரில் முப்பத்தி ஒன்பதாவது-(39) லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆர்.சி.பி அணியானது கோலி மற்றும் மேக்ஸ்வெல் ஆகிறது சிறப்பான ஆட்டம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 165 ரன்களை எடுத்தது.

Kohli

- Advertisement -

அதன்பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி 18.1 ஓவர்களில் 111 ரன்கள் மட்டுமே அடித்து 54 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது பெங்களூர் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஏ.பி.டி வில்லியர்ஸ்-இன் மகன் தனது தந்தை ஆட்டமிழந்ததும் அருகில் இருந்த சேரை தாக்கிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூர் அணியின் துவக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விராட் கோலி 51 ரன்களும், 3வது வீரராக களம் புகுந்து பாரத் 32 ரன்களும், மேக்ஸ்வெல் 56 ரன்களும் குவித்தனர்.

பின்னர் இறுதி நேரத்தில் களமிறங்கிய டிவில்லியர்ஸ் தனது அதிரடி வெளிப்படுத்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் 6 பந்துகளில் 11 ரன்கள் குவித்த நிலையில் பும்ராவின் பவுன்சர் பந்தை அடிக்க முற்பட்ட விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அப்போது டிவில்லியர்ஸ்-இன் மகன் தனது தந்தை ஆட்டம் இழந்ததும் விரக்தியடைந்து எதிரில் இருந்த சேரை கையால் ஓங்கி அடித்தார்.

- Advertisement -

abd

பின்னர் சற்று வலியுடன் கையை உதறினார். இதனை அவரது அருகில் இருந்த வில்லியம்ஸின் மனைவியும் பார்த்தபடி இருக்கும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியது மட்டுமின்றி ரசிக்கவும் வைத்துள்ளது.

இதையும் பாருங்க : 19 ஆவது ஓவரில் பிரசித் கிருஷ்ணாவின் ஓவரை அடித்து நொறுக்க இதுவே காரணம் – ஜடேஜா ஓபன்டாக்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் இந்த ஐபிஎல் தொடரில் இரண்டாவது பாதியில் முதல் 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்த பெங்களூர் அணி தற்போது மும்பை அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement