இந்த ஐ.பி.எல் தொடர்ல என்னை கவர்ந்த பிளேயர் இவர்தான். இவருக்கு பிரைட் பியூச்சர் இருக்கு – ஏ.பி.டி பாராட்டு

ABD
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது கடந்த 2 மாதங்களாக ரசிகர்களை மகிழ்வித்து வந்த வேளையில் இன்றுடன் இந்த தொடர் நிறைவடைய உள்ளது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் சி.எஸ்.கே மற்றும் குஜராத் அணிகள் மோதவுள்ளன. இந்த தொடரில் ஏகப்பட்ட இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றனர்.

IPL-2023

- Advertisement -

அந்தவகையில் சிறப்பாக செயல்பட்ட இளம்வீரர்களை பல்வேறு முன்னாள் வீரர்களும் பாராட்டி வருகின்றனர். அந்தவரிசையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும், ஆர்.சி.பி அணியை சேர்ந்த முன்னாள் வீரருமான ஏ.பி.டி வில்லியர்ஸ் இந்த தொடரில் தனக்கு பிடித்த தனது கவனத்தை ஈர்த்த வீரர் யார்? என்ற கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் ஏ.பி.டி பேசுகையில் கூறியதாவது : இந்த ஐ.பி.எல் தொடரில் பல்வேறு இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும் என்னை கவர்ந்தது யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தான். ஏனெனில் மிகவும் இளம்வீரரான அவர் இன்னும் பல ஆண்டுகள் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன்.

Jaiswal

இளம்வீரரான அவர் அனைத்து வகையான கிரிக்கெட் ஷாட்களையும் அற்புதமாக ஆடுகிறார். அதோடு போட்டியின் எந்த சூழலில் எவ்வாறு விளையாட வேண்டும், எப்படிப்பட்ட துவக்கத்தை கொடுக்க வேண்டும் என்றும் அவருக்கு நன்றாக தெரிகிறது. சுப்மன் கில்லும் சிறப்பாக தான் ஆடுகிறார். ஆனால் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அவரையும் விட இளம்வயது வீரர் என்பதால் ஜெய்ஸ்வால் இன்னும் நீண்ட தூரம் சிறப்பாக பயணிப்பார் என ஏ.பி.டி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : CSK vs GT : பேசாம ரிட்டையர் ஆகலாம், இம்பேக்ட் ரூல் வெச்சு தோனி 2024இல் விளையாட முடியாது – சேவாக் கூறும் காரணம் என்ன

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இந்த ஆண்டு 14 போட்டிகளில் விளையாடிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 1 சதம் மற்றும் 5 அரைசதம் என 625 ரன்களை குவித்து அந்த சார்பாக இந்த ஆண்டு அதிக ரன்கள் குவித்த பேட்டராக முத்திரை பதித்தார். அதோடு அன் கேப்புடு பிளேயராக ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையையும் அவர் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement