சஞ்சய் மஞ்சரேக்கரை தொடர்ந்து ஜடேஜாவை சீண்டி ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட – முன்னாள் வீரர்

Jadeja
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டான ரவீந்திர ஜடேஜா தனது சிறப்பான பந்துவீச்சு மற்றும் அதிரடியான பேட்டிங் காரணமாக இந்திய அணியின் முக்கிய நட்சத்திர வீரராக கடந்த பல ஆண்டுகளாக விளையாடி வருகிறார். அதிலும் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாகவே இவரது பேட்டிங்கில் வெளிப்பட்ட அதிரடி இன்னும் முக்கியமான வீரராக அணியில் மாற்றியது. ஆனால் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரை அடுத்து ரவீந்திர ஜடேஜா சற்று சறுக்களை சந்தித்துள்ளார் என்றே கூறலாம்.

Ravindra Jadeja IND vs ENg

- Advertisement -

அதோடு அவரது இடத்தில் தற்போது இறங்கி வரும் அக்சர் பட்டேலின் சிறப்பான ஆட்டம் காரணமாக தற்போது அவரது இடம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஜடேஜாவின் ஆட்டம் பழையபடி இல்லை என்றும் அவரது ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் எதிர்வரும் டி20 உலக கோப்பையில் அவர் விளையாட வேண்டும் என்றால் அவர் பேட்டிங்கில் தன்னை நிரூபித்தால் மட்டுமே இடம் கிடைக்கும் என்ற கருத்தினை தெரிவித்து ரசிகர்கள் மத்தியில் நன்றாக வாங்கி கட்டிக் கொண்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் ஜடேஜாவை சீண்டும் வகையில் மற்றொரு இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை ஜடேஜாவை குறித்து வெளிப்படுத்தி உள்ளார்.

Jadeja

இது குறித்து அவர் கூறுகையில் : ஜடேஜா எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரில் இடம் பிடித்து விளையாடினாலும் அவரால் விக்கெட்டுகளை எடுக்க முடியாது என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : கண்ணாடி என்றும் பொய் சொல்லாது என்று ஒரு புதிரான கருத்தினை கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பைக்கு பின்னர் ஜடேஜா விளையாடிய 7 போட்டிகளில் அவர் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். அதோடு ஓவருக்கு எட்டு ரன்களுக்கும் மேல் விட்டுக்கொடுத்து பேட்டிங்கிலும் பெரிய அளவில் சொதப்பி வருகிறார்.

இதையும் படிங்க : இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கும் எல்லா கெப்பாசிட்டியும் அவரிடம் இருக்கு – ஜெயவர்த்தனே புகழாரம்

இனிமேல் ஜடேஜா பந்துவீச்சில் என்னதான் சிறப்பாக செயல்பட்டாலும் அவரால் விக்கெட்டை வீழ்த்த முடியாது என்று சீண்டுடியுள்ளார். ஏற்கனவே ஜடேஜாவை சீண்டி சஞ்சய் மஞ்சரேக்கர் ரசிகர்களிடம் திட்டு வாங்கிக் கொண்டிருக்க தற்போது ஆகாஷ் சோப்ராவின் இந்த கருத்திருக்கும் ரசிகர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement