தோனி இந்த தவறை மட்டும் பண்ணா இன்னைக்கும் தோக்க வேண்டியது தான் – ஆகாஷ் சோப்ரா ஓபன்டாக்

Chopra
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த வேளையில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் தற்போது பிளே ஆப் சுற்றில் விளையாட இருக்கின்றன. இன்று நடைபெற இருக்கும் முதலாவது குவாலிபயர் போட்டியில் முதல் இடத்தில் இருக்கும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், இரண்டாவது இடத்தில் இருக்கும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாட இருக்கின்றன.

cskvsdc
cskvsdc

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதனால் இந்த போட்டியில் வெற்றி பெற இரண்டு அணிகளுமே கடுமையாக போராடும் என்று தெரிகிறது. அதேவேளையில் இந்த போட்டியில் தோல்வி அடையும் அணி எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோத வேண்டும் என்பதால் இறுதிப்போட்டிக்கு செல்ல மற்றொரு வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு செல்ல சென்னை அணி உத்வேகமாக காத்திருக்கிறது. கடந்த ஆண்டு மோசமான தோல்வியை சந்தித்திருந்த சென்னை அணி இந்த ஆண்டு பலமாக திரும்பி இருப்பதால் நிச்சயம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Dhoni

இந்நிலையில் சென்னை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டுமெனில் தோனி முன்கூட்டியே களமிறங்க கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தோனி தற்போது நல்ல டச்சில் இல்லை. எனவே அவர் முன்கூட்டியே பேட்டிங் இறங்கக்கூடாது. அவருக்கு முன்னதாக ஜடேஜா, பிராவோ ஆகியோர் விளையாட வைத்த பின்னரே தோனி விளையாட வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : பிளே ஆப் போட்டிகளில் இருந்து வெளியேறிய முக்கிய வீரர் – கொல்கத்தா அணிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

ஏனெனில் தோனி போட்டியில் சில பந்துகளை சந்தித்து ரன் எடுக்காமல் நெருக்கடியை ஏற்படுத்தினால் பின்னால் வரும் வீரர்களுக்கு அது இன்னும் கடினமாக அமையும். எனவே தற்போது நல்ல பார்மில் இருக்கும் ஜடேஜா, பிராவோ ஆகியோர் முன்கூட்டியே களமிறக்கிவிட்டு தோனி இறுதியாக இறங்கலாம் என ஆகாஷ் சோப்ரா அட்வைஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement