ஆசிய கோப்பைக்கான பிளேயிங் லெவனில் ரிங்கு சிங் இடம்பிடிக்க மாட்டார்.. காரணத்தை கூறிய – ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra and Rinku Singh
- Advertisement -

எதிர்வரும் 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இளம் அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங்கும் இடம் பிடித்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடி வரும் அவர் இதுவரை 33 போட்டிகளில் விளையாடி மூன்று அரை சதங்களுடன் 546 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக 161 ஸ்ட்ரைக் ரேட்டுடன் பினிஷராக விளையாடி வரும் அவர் இந்திய அணியின் முக்கிய வீரராகவும் இடம் பிடித்து வருகிறார்.

பிளேயிங் லெவனில் ரிங்கு சிங்குக்கு வாய்ப்பு கிடைக்காது : ஆகாஷ் சோப்ரா

ஆனால் எதிர்வரும் 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்காது என்றும் பிளேயிங் லெவனில் அவர் இடம் பிடிக்காமல் வெளியில்தான் அமர்ந்திருப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் அதற்கான காரணத்தையும் அவர் விவரித்துள்ளார். அந்த வகையில் ஆகாஷ் சோப்ரா கூறியதாவது : என்னை பொறுத்தவரை ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏழாம் இடத்தில் ரிங்கு சிங்கை காட்டிலும் ஷிவம் துபே தான் இடம்பிடிப்பார். ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியின் பின் வரிசையில் ஹார்திக் பாண்டியா, ஜிதேஷ் சர்மா, அக்சர் பட்டேல் போன்ற வீரர்கள் நிறைந்திருப்பதால் எந்த இடத்தில் ரிங்கு சிங்குக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எனக்கு தெரியவில்லை.

ஏற்கனவே இந்திய அணியின் பினிஷராக அவர் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் தற்போதைய இந்திய அணியின் காம்பினேஷனை பொறுத்தவரை ஷிவம் துபே தான் ஏழாவது இடத்தினை பிடிப்பார். எனவே ரிங்கு சிங் வெளியேற வேண்டிய வாய்ப்பு உள்ளது. அதோடு ஷிவம் துபேவும், ஹார்டிக் பாண்டியாவும் இடம் பிடிக்கும் பட்சத்தில் அவர்கள் இருவரும் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக செயல்படுவார்கள்.

- Advertisement -

எனவே அந்த ஒரு சாதகத்தின் அடிப்படையில் ரிங்கு சிங்கை தாண்டி ஷிவம் துபே பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பார் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இருவரும் ஆசிய கோப்பை தொடர்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கிறதோ கிட்டத்தட்ட அதே அணி தான் அடுத்த 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான பிளேயிங் லெவனாகவும் இருக்கும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : இன்னும் 17 ரன்கள் போதும்.. ஆசிய கோப்பை வரலாற்றில் மாபெரும் சாதனையை நிகழ்த்தப்போகும் – ஹார்டிக் பாண்டியா

எனவே இந்த ஆசிய கோப்பை தொடரானது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement