வீடியோ : சிக்ஸ் அடிக்க இறங்கி பேட்டை பறக்க விட்ட ரிஷப் பண்ட் – அவ்ளோ வெறி மாப்பிளைக்கு

pant 1
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியின் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ள வேளையில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற இன்னும் 111 ரன்கள் தேவை. அதே வேளையில் இந்திய அணி 8 விக்கெட்டை வீழ்த்தும் பட்சத்தில் இந்திய அணிக்கும் வெற்றி பெற ஒரு வாய்ப்பு இருக்கிறது. எனவே இன்றைய போட்டி இரு அணிகளுமே படு சுவாரசியமாக அமைய காத்திருக்கிறது.

pant 2

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் தங்களது 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது ரிஷப் பண்ட்டின் சிறப்பான ஆட்டம் காரணமாக தட்டுத்தடுமாறி 198 ரன்களை குவித்தது. இந்த 2-வது இன்னிங்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஒருவர்கூட 30 ரன்களை தொடாத வேளையில் ரிஷப் பண்ட் மட்டும் ஒருபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 139 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்சர்கள் என 100 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அவரை தவிர்த்து ஏதாவது ஒரு பேட்ஸ்மேனாவது அவருக்கு ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் நிச்சயம் இந்திய அணி இன்னும் 50 ரன்கள் கூடுதலாக அடித்து போட்டியில் பலமான இடத்தில் இருந்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் ஒருபுறம் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி கொண்டிருக்க மறுபுறம் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரிந்ததால் இந்திய அணி 200 ரன்களை எடுக்காமல் 198 ரன்களுக்கு 2-வது இன்னிங்சை முடித்துக்கொண்டது.

இந்நிலையில் இந்த போட்டியின்போது சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு இறங்கிவந்த ரிஷப் பண்ட் பேட்டை தனது கையில் இருந்து தவறவிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எப்பொழுதுமே சிக்ஸர் அடிக்கும் போது ரிஷப் பண்ட்க்கு கை வழுகுவது சாதாரணமாக நடைபெற்று வருகிறது. பலமுறை அவர் ஒரு கையில் சிக்சர் அடித்து நாம் பார்த்திருக்கிறோம்.

- Advertisement -

இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கா இப்படி நிலைமை வரணும் – ஐயர்லாந்து அணி செய்த சிறப்பான சம்பவம்

அந்த வகையில் இந்த போட்டியிலும் அவர் ஒரு பந்தினை பலமாக அடிக்க முயற்சித்தபோது அவரது கையிலிருந்து வழுக்கி பேட் பறந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement