கோலிக்கு ஒரு நியாயம் ? நடராஜனுக்கு ஒரு நியாயமா ? – திடீரென கேள்வி எழுப்பிய கவாஸ்கர்

Gavaskar-1
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த தொடரில் கலந்து கொண்ட போதே டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கு பின்னர் அவர் இந்தியா திரும்புவது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஏற்கனவே 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை முடித்துள்ள இந்திய அணி தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி முடிவடைந்த நிலையில் கோலி தனது முதல் குழந்தை பிறப்பிற்காக தற்போது நாடு திரும்பியுள்ளார்.

kohli

- Advertisement -

இந்நிலையில் ஏற்கனவே அவரின் இந்த விடுமுறை குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஒரு சிலர் விராத் கோலியின் இந்த விடுமுறைக்கு ஆதரவாகவும், ஒரு சிலர் எதிராகவும் கருத்துகளை தெரிவித்து வந்தனர். மேலும் கோலி தனது முதல் குழந்தை பிறப்புக்காக விடுமுறை கேட்டுள்ளது சரியான ஒன்று என்று பலரும் தங்களது ஆதரவை அவருக்கு தெரிவித்து வர தற்போது சற்று வித்தியாசமாக கோலியின் இந்த விடுமுறையை நடராஜன் உடன் ஒப்பிட்டு கவாஸ்கர் கேள்வி ஒன்றினை எழுப்பியுள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில் : இந்திய அணியின் கேப்டன் என்பதினால் அவருக்கு அதிகமான சலுகைகள் கிடைக்கிறது என்று நான் கருதுகிறேன். ஏனெனில் ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு நடராஜனை இந்திய அணியில் தேர்வு செய்து ஆஸ்திரேலியா கூப்பிட்டு வந்து விட்டனர். ஆனால் அவருக்கு ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றில் போதே பெண் குழந்தை பிறந்தது அதனை அவர் இதுவரை சந்திக்கவில்லை. மேலும் இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமாகி விளையாடிய நடராஜன் இப்போது இந்தியா திரும்பி தனது மகளை சந்தித்து இருக்கலாம்.

Nattu

ஆனால் அவர் டெஸ்ட் அணியில் இடம் பெறாவிட்டாலும் வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக அங்கேயே வைத்து இருப்பது தவறு. அணியில் இடம் பெற்றிருந்தால் கூட அவர் ஆஸ்திரேலியாவில் இருப்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால் பயிற்சி பந்துவீச்சாளராக ஆஸ்திரேலியாவில் இருக்கும் அவர் தனது மகளை சந்திக்காமல் இருக்கிறார். அவர் தற்போது அறிமுக வீரராக இருப்பதாலேயே அவர் அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டது. இதை அவர் வெளிப்படையாகக் கூற முடியாது.

Nattu-2

ஆனால் கோலி அப்படி கிடையாது அவர் கேப்டன் என்பதால் எந்த கருத்தினையும் வெளிப்படையாக தெரிவிக்கிறார். இப்படி கோலிக்கு ஒரு நியாயம் ? மற்றவர்களுக்கு ஒரு நியாயமா ? என்பதுபோல கவாஸ்கர் கேள்வி எழுப்பி உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது நடராஜனுக்கு பெண் குழந்தை பிறந்ததை சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் அதனை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement