இந்திய அணி தற்போது நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரின் இறுதி போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. அந்த போட்டியில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி 119 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது பெற்றார். மேலும் கேப்டன் கோலி தொடர்நாயகன் விருதையும் பெற்று அசத்தினார்கள்.
இந்த இறுதிப் போட்டியில் ரோகித் சர்மாவின் ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் கைகொடுத்தது. அவரின் சிறப்பான அதிரடி ஆட்டத்தினால் இந்திய அணி 48வது ஓவரிலேயே எளிதாக ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மாவின் ஆட்டம் அனைவராலும் பாராட்டப்பட்டு ஒரு நிலையில் ரோகித் சர்மா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார்.
அதில் நான் பார்த்த மிகச்சிறந்த புகைப்படம் இதுதான் இந்தியா இன்று தொடரை கைப்பற்றி விட்டது. ஆனால் ஹெட்லைனில் வேறு ஒரு இடம் பிடிக்கிறார் என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான சாஹல் புகைப்படத்தை பதிவிட்டு அதனை பகிர்ந்துள்ளார்.
Best picture I saw today. India wins the series but someone else takes the headlines. Bravo!! @yuzi_chahal pic.twitter.com/dN0RXh05q9
— Rohit Sharma (@ImRo45) January 20, 2020
அந்த புகைப்படத்தில் ராக் போன்று தனது உடம்பில் குத்திக்கொண்டு சாஹல் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ட்விட்டர் வாசிகளும், நெட்டிசன்கள் இந்த பதிவை கலாய்த்து சில கருத்துக்களை தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.