டெஸ்டில் சேவாக்கூட இந்த சாதனையை செய்தது இல்லையாம். கவாஸ்கருக்கு அடுத்து ரோஹித்தானாம் – விவரம் இதோ

Rohith-2
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டி நேற்று ராஞ்சி மைதானத்தில் துவங்கியது. ஏற்கனவே இந்திய அணி தொடரை கைப்பற்றியதால் இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி தோல்வி தொடரை பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Rahane

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 117 ரன்களுடனும், ரஹானே 83 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.

நேற்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ரோகித் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ரோஹித் நேற்று அடித்த சதம் இந்த தொடரில் அவரது மூன்றாவது சதமாகும். இந்திய அணியின் துவக்க வீரர் ஒரே தொடரில் மூன்று சதங்களை அடித்தது இதற்கு முன்னர் சுனில் கவாஸ்கர் மட்டுமே மூன்று முறை ஒரே தொடரில் மூன்று சதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை அடித்துள்ளார்.

Ind

அவரைத் தொடர்ந்து இந்திய அணியின் துவக்க வீரர்கள் யாரும் இந்த சாதனையை இதுவரை படைக்கவில்லை. அதிரடி ஆட்டக்காரர் சேவாக் கூட இந்த சாதனையை செய்தது கிடையாது தற்போது இந்திய அணியின் புதிய துவக்க வீரராக களமிறங்கிய முதல் தொடரிலேயே மூன்று சதங்களை விளாசி ஒரே தொடரில் அதிக சதங்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement