உலககோப்பையையில் ஏமாற்றம் அடைந்தேன். ஆனால் இந்தமுறை விடமாட்டேன் – பாண்டியா உறுதி

Pandya-1
- Advertisement -

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரை வெற்றிகரமாக முடித்து அடுத்த தொடருக்காக தயாராகி வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

Pandya 1

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா காயம் காரணமாக இடம்பெறவில்லை. இந்நிலையில் தற்போது காயத்தில் இருந்து முழுமையாக மீண்ட ஹார்டிக் பாண்டியா தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இணைய உள்ளார்.

இந்நிலையில் தற்போது பாண்டியா பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : 50 ஓவர் உலக கோப்பையை எதிர்பாராதவிதமாக நாங்கள் தவறவிட்டோம். அதில் இருந்து மீண்டு வர எனக்கு கொஞ்ச நாட்கள் ஆனது. அதுமட்டுமின்றி காயம் காரணமாகவும் சில மாதங்கள் நான் இடைவெளி எடுத்துக்கொண்டேன்.

pandya

தற்போது என்னுடைய இலக்கு முழுவதும் அடுத்த டி20 உலகக் கோப்பையை வெல்வதுதான். 2020 ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு என்னுடைய பயிற்சியை அதிகப்படுத்தி வருகிறேன். மேலும் அந்த தொடரில் கண்டிப்பாக இந்திய அணி வெற்றி பெறவும் நான் பாடுபடுவேன் என்னுடைய இலக்கு அதுதான் என்று பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement