அணியில் அவரை சேர்த்ததற்காக அவர் எங்களுக்கு வெற்றியை பரிசாக தந்துவிட்டார் – இளம் வீரரை புகழ்ந்த கோலி

kohli
- Advertisement -

இந்திய அணி தற்போது வெஸ்ட்இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று தொடரையும் தற்போது கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது.

Ind

- Advertisement -

அந்த அணிக்கு எதிராக நேற்றைய 2-வது டெஸ்ட் போட்டியை வென்றது மூலம் அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார் விராட் கோலி. இந்நிலையில் நேற்று வெற்றிக்குப்பின் கோலி பேசுகையில் : இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை இந்த டெஸ்ட் தொடரில் வெளிப்படுத்தினார்கள். தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அதை திருத்தி ஆடும் விதம் அருமையானது.

விஹாரி ஆடும் பொழுது டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தோம். அவரது ஆட்டம் சூப்பராக இருந்தது. மேலும் அவர் ஏன் அணியில் சேர்க்கப்பட்டார் என்பதை நிரூபித்துவிட்டார். அகர்வால் மற்றும் இஷாந்தின் அரைசதம் மற்றும் ரஹானேவின் பொறுப்பான ஆட்டம் என அனைத்தும் இந்திய அணிக்கு வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

vihari 2

இந்த தொடர் முழுவதும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக போராடியது பந்துவீச்சில் அந்த அணி சிறப்பாக செயல்பட்ட போதும் நாங்கள் ரன்களை போதுமான அளவு அடித்ததால் இந்த போட்டியில் கடும் சவால் கொடுத்து நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement