இங்கிலாந்து அணிக்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தாலும் இறுதியில் தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ஜூலை 2-ஆம் தேதி இந்திய அணி பங்கேற்று விளையாடுகிறது. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இரண்டாவது போட்டியில் வெற்றிக்காக தற்போது இந்திய அணியின் வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
ஷர்துல் தாகூருக்கு பதிலாக விளையாட வாய்ப்புள்ள 2 வீரர்கள் :
மேலும் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரினை கைப்பற்ற வேண்டுமெனில் உடனடியாக வெற்றி கணக்கை ஆரம்பிக்க வேண்டும் என்பதாலும் இந்த இரண்டாவது போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்வியால் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக பேட்டிங் ஆர்டரை பொறுத்தவரை இந்திய அணியின் டாப் ஆர்டர் சிறப்பாக இருந்தாலும் பின்வரிசையில் ரன்களை குவிக்க தடுமாறி வருகிறது. இதன் காரணமாக வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக பார்க்கப்படும் ஷர்துல் தாகூர் இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் என தெரிகிறது.
ஏனெனில் முதல் டெஸ்ட் போட்டியின் போது அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து வெறும் 16 ஓவர்களை மட்டுமே வீசியிருந்தார். அதோடு பேட்டிங்கிலும் அவரால் பெரியளவு பங்களிப்பை வழங்க முடியவில்லை. இதன் காரணமாக அவர் அணியில் இருந்து நீக்கப்படலாம் என தெரிகிறது. ஒருவேளை அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டால் அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் இணைக்கப்பட வாய்ப்புள்ள இரண்டு வீரர்கள் குறித்த தகவலை இங்கு காணலாம்.
நிதீஷ்குமார் ரெட்டி : ஏற்கனவே கடந்த முறை ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான நிதீஷ் ரெட்டி ஆஸ்திரேலியா மைதானத்தில் சதம் அடித்து தனது பேட்டிங் திறமையை நிரூபித்து இருந்தார். அதுமட்டும் இன்றி பந்து வீச்சிலும் அவரால் பங்களிப்பை வழங்க முடியும் என்பதனால் ஷர்துல் தாகூருக்கு பதிலாக அவரை கொண்டுவர வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க : எது கேட்டாலும் கிடைக்குது.. அப்போ ரிசல்ட்டை சரியா கொடுக்கனும் இல்ல.. கவுதம் கம்பீர் பற்றி – ஆகாஷ் சோப்ரா பேச்சு
வாஷிங்டன் சுந்தர் : இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறயிருக்கும் எட்ஜ்பேஸ்டன் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதனால் இந்திய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் செல்ல வாய்ப்புள்ளது. அப்படி செல்லும் பட்சத்தில் ஜடேஜாவுடன் வாஷிங்டன் சுந்தர் விளையாடினால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் வலுப்படும் எனவே அவரும் ஒரு சரியான தேர்வாக இருப்பார்.



