கங்குலி முதல் ரோஹித் வரை – நடிகைகளுடன் தொடர்பிலிருந்து பிரிந்த 5 நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள்

Ganguly
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்றுக்கொடுக்கும் வீரர்களை ரசிகர்கள் தங்களது தலை மீது வைத்து சூப்பர் ஸ்டார்களாக உருவாக்கி கொண்டாடுகிறார்கள். அதற்காக கடினமாக உழைக்கும் அவர்கள் அதன் பயனாக சர்வதேச கிரிக்கெட்டில் கிடைக்கும் வாய்ப்பில் அசத்தலாக செயல்பட்டு பெற்றுக் கொடுக்கும் ஒவ்வொரு வெற்றிக்கும் ஈடாக பணமும் புகழும் தாமாக வந்து சேரும். அதனால் பெரிய பங்களா, கார் போன்ற சினிமா நடிகர்களுக்கு ஈடான வாழ்வுக்கு பஞ்சமில்லாத நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் உலக அளவில் பிரசித்தி பெறுவார்கள். பொதுவாக சர்ச்சைகள் இல்லையென்றால் அவர்கள் செலிபிரிட்டி கிடையாது என்று சொல்வார்கள்.

மேலும் இல்லையென்றாலும் இருக்கிறது என்று பேசும் இந்த உலகத்தில் கிரிக்கெட் வீரர்களை சினிமா நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கப்படுவதும் வழக்கமாகும். அதில் நிறைய கிசுகிசுக்கள் வெறும் கிசுகிசுக்களாகவே செல்லும் நிலையில் சில கிசுகிசுக்கள் நெருப்பின்றி புகையாது என்பது போல் உண்மையாகவே நடந்து கொண்டிருக்கும். அதில் விராட் கோலி – அனுஷ்கா சர்மா, டேவிட் வார்னர் – கேண்டிஸ் போன்ற சிலர் அதை காதலாக மாற்றி அதிகாரபூர்வமாக திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்.

- Advertisement -

இருப்பினும் சில நட்சத்திரங்கள் நன்றாக பழகிய பின்பு ஏதேனும் ஒரு காரணத்துக்காக பிரிவதும் வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் பிரபல நடிகைகளுடன் காதல் அல்லது டேட்டிங் போன்ற தொடர்புகளிலிருந்து பின்னர் பிரிந்து சென்ற 5 கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்:

5. ரிஷப் பண்ட்: இந்தியாவின் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரமான இவர் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டேலேவை காதலிப்பதாக கடந்த சில வருடங்களாகவே கிசுகிசுக்கள் வருகின்றன. அந்த நிலைமையில் ரிஷப் பண்ட் தன்னை ஒரு முறை பார்க்க ஹோட்டலில் பல மணி நேரங்கள் காத்திருந்ததாகவும் தமக்கு 16 – 17 மிஸ்டு கால் கொடுத்திருந்ததாகவும் பெயரைக் குறிப்பிடாமல் சமீபத்தில் ஊர்வசி தெரிவித்திருந்தது வைரலானது.

- Advertisement -

இருப்பினும் அதை மறுத்த ரிஷப் பண்ட் விளம்பரத்திற்காக இதுபோன்ற பொய்கள் சொல்வதை நிறுத்திக் கொள்ளுமாறு பதிலடி கொடுத்தார். இருப்பினும் கடந்த சில வருடங்களுக்கு முன்பே இந்த இருவரும் ஒன்றாக ஹோட்டலில் சுற்றிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்தது அவர்கள் ஒன்றாக பழகியதை உறுதிப்படுத்துகிறது.

4. ரோஹித் சர்மா: இந்தியாவின் தற்போதைய கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா இளம் வயதில் அதாவது 2012 வாக்கில் பிரபல பிரிட்டிஷ் மாடல் அழகியான சோபியா ஹயட் உடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் ஒரு கட்டத்தில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

- Advertisement -

இறுதியில் அதை உறுதிப்படுத்தும் வகையில் அந்த நடிகை வெளிப்படையாகவே தனது ட்விட்டரில் “ஆம். இந்த வதந்திகளுக்கு இப்போது நான் முற்றுப்புள்ளி வைக்கிறேன். ஆம் நான் ரோகித் சர்மாவுடன் டேட்டிங் செய்தேன். ஆனால் தற்போது அது முடிந்துவிட்டது. அவருடன் இனிமேல் டேட்டிங் செய்ய விரும்பவில்லை. இப்போது ஒரு ஜென்டில்மேனை நான் தேடி செல்கிறேன்” என்று கூறி அந்த கிசுகிசுக்களை உண்மைப்படுத்தினார்.

3. யுவராஜ் சிங்: இந்தியாவின் மற்றொரு நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் பிரபல நடிகை கிம் சர்மாவுடன் காதல் தொடர்பில் உள்ளார் என்றும் விரைவில் அவர்களுக்கு திருமணம் என்றும் ஒரு கட்டத்தில் செய்திகள் வெளியாகின.

- Advertisement -

இருப்பினும் அது சில காரணங்களுக்காக நின்று போனதாகவும் செய்திகள் வந்தன. இறுதியில் யுவராஜ் சிங்கின் தாய்க்கு அதில் விருப்பம் இல்லாததால் அந்த காதல் உறவு பாதியிலேயே முடிந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

2. மைக்கேல் கிளார்க்: ஆஸ்திரேலியாவின் நட்சத்திர முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல மாடல் மற்றும் நடிகை லாரா பிங்கிலை காதலித்து ஒரு கட்டத்தில் அமெரிக்காவில் அதை வெளிப்படுத்தி நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

அதனால் இவர்களது திருமணம் விரைவில் நடைபெற இருந்த நிலையில் நடிகை என்பதால் லாராவின் சில ஆபாசமான போட்டோ ஷூட்டுகள் அவருக்கு பிடிக்கவில்லை. அதனால் அதுபோன்றவற்றை தவிர்க்குமாறு மைக்கேல் கிளார்க் கூறியதால் இருவருக்குமிடையே ஏற்பட்ட மனக்கசப்பு இறுதியில் அவர்களது உறவை முறித்தது.

1. சௌரவ் கங்குலி: இந்தியாவின் நட்சத்திர முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி திருமணமான பின்பும் கூட அந்த சமயத்தில் பிரபலமாக இருந்த நடிகை நக்மாவுடன் தொடர்பில் இருப்பதாக 90களின் இறுதியில் செய்திகள் வந்தன. அதனால் அந்த இருவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டு பின்பு பிரிந்துவிட்டனர்.

இது பற்றி மனம் திறந்த நக்மா கடந்த சில வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் பேசியது பின்வருமாறு. “மற்ற விஷயங்களை தவிர ஒரு வேலை ஆபத்தில் இருந்தது, எனவே ஒருவர் பிரிந்து செல்ல வேண்டியிருந்தது. ஈகோ உடன் ஒன்றாக இருந்து பயணிப்பதை வலியுறுத்துவதற்கு பதிலாக ஒருவர் நிறைய விஷயங்களை எடை போட வேண்டியிருந்தது” என்று கங்குலியின் பெயரை குறிப்பிடாமல் கூறினார்.

Advertisement