கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட க்ருனால் பாண்டியாவிற்கு பதிலாக விளையாட வாய்ப்பிருக்கும் – 3 வீரர்கள்

Krunal-2
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆனது தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நிலையில் இன்று நடைபெற இருந்த இரண்டாவது டி20 போட்டி நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பி.சி.சி.ஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ind

- Advertisement -

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் க்ருனால் பாண்டியாவிற்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக இந்தப் போட்டியானது நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இரு அணி வீரர்களும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகளின் அடிப்படையில் நாளைய போட்டி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளைய போட்டியில் க்ருனால் பாண்டியாவிற்கு பதிலாக இந்திய அணியில் யார் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்திய அணியில் க்ருனால் பாண்டியாவிற்க்கு மாற்று வீரராக விளையாட 3 வீரர்கள் தயாராக இருக்கின்றனர். அந்த வீரர்கள் : 1) ராணா :

Rana

ஏற்கனவே ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியின்போது அறிமுகமானவர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் நல்ல பிளேயர் என்பதனால் அவர் நிச்சயம் இந்த டி20 போட்டியில் இடம்பெற வாய்ப்புள்ளது. மேலும் அவர் ஒரு சில ஓவர்களும் பந்து வீசுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Gowtham

2) கிருஷ்ணப்பா கவுதம் : ஏற்கனவே ஒரு நாள் போட்டிகளில் கடந்த போட்டியின் போது அறிமுகமான கிருஷ்ணப்பா கவுதம் பேட்டிங் செய்வது மட்டுமின்றி பந்துவீச்சிலும் சிறிது கை கொடுக்க கூடியவர் என்பதன் காரணமாக இவருக்கும் ஒரு வாய்ப்பு உள்ளது. 3) ராகுல் சாகர் : ஆல்ரவுண்டர் இல்லாமல் இந்திய அணி 5 முழுநேர பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கினால் இவருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement