வரலாறு காணாத காரணத்தால் நிறுத்தப்பட்ட போட்டி.. நேரலையில் நிகழ்ந்த காமெடி.. சிரித்த வார்னர்.. நடந்தது என்ன?

Umpire Lift
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2வது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் நகரில் துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா கடுமையாகப் போராடி முதல் இன்னிங்சில் 318 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

அதிகபட்சமாக மார்னஸ் லபுஸ்ஷேன் 63, உஸ்மான் கவாஜா 42 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அமீர் ஜமால் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு அப்துல்லா ஷபிக் 62, கேப்டன் சான் மசூத் 54 ரன்கள் எடுத்ததால் நல்ல துவக்கத்தை பெற்றது. ஆனாலும் அதன் பின் சிறப்பாக பந்து வீசிய ஆஸ்திரேலியா 264 ரன்களுக்கு பாகிஸ்தானை ஆல் அவுட் செய்தது.

- Advertisement -

வினோத நிகழ்வு:
ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 54 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜா 0, மார்னஸ் லபுஸ்ஷேன் 4 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து சாகின் அப்ரிடி அவுட்டாக்கி மிகப்பெரிய அச்சுறுத்தலை கொடுத்தார்.

அதனால் 6/2 என ஆஸ்திரேலியா திண்டாட்டமான துவக்கத்தை பெற்ற போது 3வது நாள் உணவு இடைவெளி வந்தது. ஆனால் அந்த இடைவெளி முடிந்தது போட்டி மீண்டும் துவங்குவம் நேரத்தில் பெவிலியனில் இருந்த 3வது நடுவர் ரிச்சர்ட் இல்லிங்ஒர்த் திடீரென காணவில்லை. அதன் காரணமாக போட்டி நிறுத்தப்பட்ட நிலையில் அம்பயர் எங்கே என்று அனைவரும் தேடிப் பார்த்தனர்.

- Advertisement -

அப்போது அடுத்த சில நிமிடங்கள் கழித்து மிகவும் சோர்வாக வந்த அம்பயர் நாற்காலியில் அமர்ந்து தாம் லிஃப்டில் மாட்டிக் கொண்டதாக வேடிக்கையாக தெரிவித்தார். அதாவது உணவு இடைவெளியில் ஏதோ ஒரு காரணத்திற்காக மைதானத்தின் மற்றொரு தளத்திற்கு சென்று வரும் வழியில் அவர் லிஃப்டில் பாதியிலேயே மாட்டிக்கொண்டதாக தெரிகிறது. அதன் பின் அதிலிருந்து வந்த அவர் நாற்காலியில் அமர்ந்து “நான் நன்றாக இருக்கிறேன்” என்பது போல் கையை சிக்னல் கொடுத்தது ரசிகர்களையும் வர்ணனையாளர்களையும் சிரிப்பில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க: சக்ஸஸ் பண்ணிட்டீங்க.. தம்மை போலவே பெய்ல்ஸ் மேஜிக் செய்த விராட் கோலியை.. வாழ்த்திய ஸ்டூவர்ட் ப்ராட்

குறிப்பாக பேட்டிங் செய்வதற்காக களத்தில் இருந்த டேவிட் வார்னர் மற்றும் எஞ்சிய 2 அம்பயர்களும் 3வது அம்பயர் லிஃப்டில் மாட்டிக் கொண்டார் என்பதை அறிந்து வாய்விட்டு சிரித்தார்கள். மேலும் நாய், பறவை, பாம்பு, சூரிய வெளிச்சம் போன்ற பல்வேறு காரணங்களால் இதற்கு முன் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் வரலாற்றிலேயே முதல் முறையாக தற்போது நடுவர் லிஃப்டில் மாட்டிக் கொண்டதால் போட்டி நிறுத்தப்பட்டது வேடிக்கையாக அமைந்தது. இதை தொடர்ந்து நடைபெற்று வரும் போட்டியில் ஆஸ்திரேலியா சற்று முன் வரை 114/4 ரன்கள் எடுத்து 168 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement