இந்த ஆண்டு 12ஆவது ஐ.பி.எல் போட்டித்தொடர் நாளை மாலை முதல் துவங்க உள்ளது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் அதிரடி வீரரான யுவராஜ் சிங் கடந்த 2018ஆம் ஆண்டு பஞ்சாப் அணியில் அணியில் விளையாடினார். பிறகு, அந்த அணி அவரை ஏலத்தில் விட முடிவு செய்தது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்தில் யுவராஜ் விடப்பட்டார். அதன்படி அவரது விலை 1 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அவரை எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை.
பின்பு, மும்பை அணி யுவராஜை அடிப்படை விலையான 1 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்நிலையில் யுவராஜ் குறித்து சச்சின் தனது கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். அதில் சச்சின் கூறியதாவது : மும்பை அணி ரசிகர்களுக்கு இந்த வருடம் யுவராஜ் சிங்கிடம் இருந்து நல்ல விருந்து காத்திருக்கிறது. அவரின் எளிதாக சிக்ஸரை அடிக்கும் திறனை கண்டு மும்பை ரசிகர்கள் மகிழ்வார்கள். அவர்களுக்காக யுவராஜ் நிச்சயம் அதிரடியாக ஆடுவார் என்று சச்சின் நம்பிக்கை தெரிவித்தார்.
The Little Master surely knows a thing or two about what Mumbai likes ????#CricketMeriJaan #OneFamily @sachin_rt @YUVSTRONG12 pic.twitter.com/AKx3LkaASA
— Mumbai Indians (@mipaltan) March 23, 2019
கடந்த ஆண்டு பஞ்சாப் அணியில் இடம்பெற்ற யுவராஜ் சிங் சுமாராகவே விளையாடினார். அவரிடம் பழைய அதிரடி இல்லை. இந்த ஆண்டு அவரது கடைசி ஐபில் தொடராக கூட இருக்கலாம் எனவே அவர் இந்த தொடரில் அதிரடியாக ஆட வாய்ப்பிருக்கிறது என்று நம்பலாம்.