நேற்று (மே 27) மும்பையில் நடந்த ஹைட்ரபாத்திற்கு எதிரான இறுதி போட்டியில் வெற்றி பெற்று. ஐபிஎல் தொடரின் 11 சீசனில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது சென்னை அணி. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய வாட்ஸனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றது. தற்போது இந்த அதிரடி நாயகனுக்கு மற்றும் ஒரு அதிரடி நாயகனான சேவாக் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நேற்று மும்பையில் நடைபெற்ற இறுதி போட்டியில் முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 வர்கள் முடிவில் 78 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் வில்லையம்சன் 47 ரன்களை எடுத்தார். பின்னர் களமிறங்கிய சென்னை அணியில் வாட்சன் அதிரடியாக விளையாடி 57 பந்துகளில் 117 ரன்களை குவித்தார்.
நேற்றைய போட்டியில் ஆட்டநாயகனாக இருந்த வாட்ஸன், இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வந்தார். இந்த தொடரில் 15 போட்டிகளில் போட்டிகளில் விளையாடிய வாட்ஸன் 555 ரன்களை குவித்துள்ளார் அதில் 2 சத்தங்களும் அடங்கும். நேற்றநடந்த இறுதி போட்டியில் 51 பந்துகளில் 117 ரன்களை குவித்த சென்னை அணியின் வாட்சனுக்கு அதி வேக சதத்தை அடித்த விருதும் வழங்கப்பட்டது.
Nandri Watson!
Stand and deliver!— Virender Sehwag (@virendersehwag) May 27, 2018
இந்நிலையில் நேற்று நடந்த இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடிய வாட்சனை முன்னாள் இந்திய அதிரடி அடகாரர் ஷேவாக் பாராட்டியுள்ளார். இதுபற்றி அவர் டிவிட்டெரில் பதிவிட்டுள்ளது “நன்றி வாட்சன்!! ” என்று பதிவிட்டுள்ளார். இதுபற்றி அவர் மேலும் பதிவிட்டுள்ளத்தில் “வாழ்த்துக்கள் சென்னை அணி, உலகத்தின் மிக பெரிய டி20 தொடரில் வெற்றிபெற்றத்திற்கு,, இந்த தொடர் முழுவதம் சிறப்பாக விளையடினிர்கள்,இது தமிழ் நாடு மக்களுக்கு கிடைக்க பெற வேண்டிய ஒரு வெற்றி தான் ” என்று பதிவிட்டுள்ளார்.