இந்தியாவிற்கு வந்து இறங்கியதும் சுனில் நரேன் கூறியது – என்ன தெரியுமா ?

- Advertisement -

ஐபிஎல் போட்டிகள் இந்த வருடம் 23ஆம் தேதி துவங்குவதால் அனைத்து அணி வீரர்களும் பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்த வண்ணம் உள்ளனர். அப்படி இருக்கையில் கொல்கத்தா அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான சுனில் நரைன் இந்தியா வந்துள்ளார்.

Ipl cup

- Advertisement -

சுனில் நரேன் கொல்கத்தா அணிக்காக கிறிஸ் லின்னுடன் இணைந்து துவக்க ஆட்டக்காரர் ஆகவும் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் ஆகவும் திகழ்கிறார். கொல்கத்தா அணியின் வெற்றிக்கு இவர் பலமுறை தனது மாயாஜால பந்துவீச்சு மூலம் வழிவகுத்துள்ளார். இந்நிலையில் நரேன் இந்தியா வந்து இறங்கியதும் பேட்டி ஒன்று அளித்தார்.

அதில் நரேன் சுனில் கூறியதாவது : இந்தியாவிற்கு திரும்பவும் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும் என் மனதிற்கு அது ஒருவித சுகத்தைத் தருகிறது. மேலும், கொல்கத்தா என்னுடைய இரண்டாவது வீடாக நான் கருதுகிறேன் அந்த அளவிற்கு எனக்கு நெருக்கமான நகரமாக கொல்கத்தாவும், எனக்கு ஆதரவு அளிக்கும் என் அணியும் திகழ்கிறது.

கடந்த பல ஆண்டுகளாக சிறப்பாக ஆடி வருவது போல் இந்த முறையும் நானும் எனது அணியும் சிறப்பாக விளையாடுவோம். மேலும், கோப்பையையும் கைப்பற்றுவோம் என்று கூறி பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்து சென்றார். வெற்றி நாயகன் சுனில் நரேன்

Advertisement