கடவுளே சி.எஸ்.கே ஜெயிக்கனும். பரபரப்பான நேரத்தில் பிராத்தனை செய்த தோனியின் மகள் – க்யூட் மொமன்ட்

Ziva
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 50-ஆவது லீக் போட்டி இறுதி ஓவர் வரை பரபரப்பாக சென்றதை நாம் கண்டு களித்தோம். நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 136 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய டெல்லி அணி 137 ரன்களை நோக்கி இரண்டாவது பேட்டிங் செய்யும் போது சிறப்பாக ஆரம்பித்தாலும் இறுதிநேரத்தில் தட்டித்தட்டி கரை சேர்ந்தது என்று கூறலாம்.

அந்த அளவிற்கு அவ்வப்போது விக்கெட்டுகள் விழுந்ததால் டெல்லி அணி சற்று சிரமப்பட்டே கடைசி ஓவரில் வெற்றியை ருசித்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இறுதிகட்டத்தில் சிஎஸ்கே அணி ரசிகர்கள் மற்றும் டெல்லி அணி ரசிகர்கள் என இரு தரப்பினரும் தங்களது அணி வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனையை செய்தனர். அவ்வகையில் தோனியின் மகள் ஸிவா தோனி தனது தாயின் மடியில் அமர்ந்தவாறு சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டி இரு கை கூப்பி பிரார்த்தனை செய்தது தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பானது.

- Advertisement -

மேலும் அது குறித்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. வெற்றிக்கு முக்கியமான கட்டத்தை சென்னை அணி நெருங்கிக் கொண்டிருக்கும் போது ஸிவா தோனி சென்னை அணி வெற்றி பெற வேண்டும் என்றவாறு பிரார்த்தனை செய்தது தற்போது இணையத்தில் புகைப்படங்களாக வைரலாகி வருகிறது.

இருப்பினும் 19வது ஓவரில் கிருஷ்ணப்பா கவுதம் தவறவிட்ட கேட்சை பயன்படுத்திய ஹெட்மையர் 20 ஓவரில் அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். சிஎஸ்கே இந்த போட்டியில் தோற்று இருந்தாலும் இறுதிவரை வீரர்கள் போராடிய விதம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றிக்காக பிராத்தனை செய்த ஸிவா தோனியின் இந்த பிரார்த்தனை தற்போது புகைப்படங்களாக இணையத்தில் வைரலாகியுள்ளது.

அதுமட்டுமின்றி தோனியின் மகளது இந்த செயல் ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது. சிறுவயதிலிருந்தே தனது தந்தையுடன் மைதானத்திற்கு வரும் தோனியின் மகள் தற்போது ஐந்து வயது ஆகிய நிலையில் தந்தையின் அணி வெற்றி பெற வேண்டும் என்ற பிராத்தனை செய்யும் அளவிற்கு தற்போது வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement