கிரிக்கெட் விளையாட்டு என்றாலே தற்போது கோடிக்கணக்கில் பணம் புழங்கும் ஒரு இடமாக மாறி உள்ளது. இதனால் இளம் வயதிலேயே கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பை பெறும் சில வீரர்கள் ஓரிரு ஆண்டுகளில் கோடீஸ்வரராக மாறி வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் வீரர்களுக்கு சம்பளம் அதிகம் அது மட்டுமின்றி ஐபிஎல் தொடர்களின் வரும் கிடைக்கும் வருமானமும் மிகவும் அதிகம் ஆனால் இப்படி எந்த ஊதியமும் இல்லாமல் அடிப்படை வருமானம் கூட இல்லாத சில கிரிக்கெட் வீரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அதற்கு உதாரணமாக ஜிம்பாப்வே வீரர்களுக்கு ஊதியம் என்பது மிகவும் குறைவே என்று கூறலாம். 1990-2000 ஆவது காலகட்டங்களில் ஒரு நல்ல அணியாக பார்க்கப்பட்ட ஜிம்பாப்வே அணி அதன் பிறகு தொடர்ச்சியாக கடை நிலையிலேயே உள்ளதால் அந்த அணிக்கு ஸ்பான்சர்கள் ஏதும் கிடைக்காமல் வீரர்களுக்கு ஊதியமும் குறைவாக கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஜிம்பாப்வே அணியை சேர்ந்த வீரரான ரியான் பர்ல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் பார்ப்பவர்களை மனம் உருக வைத்துள்ளது. ஏனெனில் ஒரு தொடரின் போது விளையாடிய ஷூவை மீண்டும் அவர் பசை போட்டு ஒட்டி வைக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
Any chance we can get a sponsor so we don’t have to glue our shoes back after every series 😢 @newbalance @NewBalance_SA @NBCricket @ICAssociation pic.twitter.com/HH1hxzPC0m
— Ryan Burl (@ryanburl3) May 22, 2021
அதுமட்டுமின்றி எங்களுக்கு ஏதேனும் ஸ்பான்சர் கிடைக்க வாய்ப்பு இருந்தால் ஒவ்வொரு தொடர் முடிந்த பிறகும் எங்களது ஷூவை நாங்கள் பசை போட்டு ஒட்ட வேண்டிய அவசியம் இருக்காது என்று அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகத்தை செய்து வெளியிட்டுள்ளார்.
I’m told that certain members high up in Zimbabwe Cricket are angry at Ryan Burl’s plea for sponsorship help as it “reflects bad on the organisation”.
I’m also told that the same members want disciplinary action to be enforced.
This would be a terrible move by Zim Cricket. pic.twitter.com/sr792L0YiI
— Adam Theo🇿🇼🏏 (@AdamTheofilatos) May 23, 2021
இந்நிலையில் அவரது இந்த பதிவிற்கு பிறகு 24 மணி நேரத்திற்குள் PUMA நிறுவனம் உடனடியாக அவருக்கு ஸ்பான்சர் செய்ய முன்வந்தது. இருப்பினும் அவர் தற்போது அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் மூலம் பிரச்சனையில் சிக்கியுள்ளார். ஏனெனில் அவர் பதிவிட்ட அந்த புகைப்படத்தோடு ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தையும் அவர் டேக் செய்துள்ளதால் வீரர்களின் ஒழுங்கு மீறல் நடவடிக்கை விதிமுறைப்படி அவர் தண்டிக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் வெளியிட்ட இந்த பதிவின் மூலம் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், கிரிக்கெட் வாரியத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் இந்த பதிவு இருப்பதாக அவர்கள் நினைப்பதால் இவர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.