அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை அணியில் தேர்வு செய்தது இதற்குத்தான் – மனம்திறந்த ஜாஹீர்கான்

arjun tendulkar
- Advertisement -

arjun-tendulkarசென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணியினரால் ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அர்ஜூன் டெண்டுல்கர் ஏற்கெனவே சையத் முஷ்டக் அலி கோப்பையில் விளையாடியவர். மேலும் கடந்த சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நெட் பவுலர்களாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் இப்பொழுதே அர்ஜூன் சிறப்பாக ஆடுவாரா அவர் சச்சின் மகன் அதனாலேயே ஏலத்தில் எடுக்கப்பட்டார் என்று அவர்மீது பல்வேறு விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் எடுத்து வைக்கப்பட்டன.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாகீர் கான் “சச்சினின் மகன் என்ற அழுத்தம் அர்ஜூன் மீது இப்போது மட்டுமல்ல எப்போதும் இருக்கும். அதனுடன் அவர் வாழ பழகிக்கொள்வதை தவிர வேறு வழி கிடையாது. ஆனால் மும்பை அணியின் சூழல் அந்த அழுத்தத்தை மறக்கடிக்கும். வலைப்பயிற்சியின் போது அர்ஜூனுடன் நிறைய நேரங்களை நான் செலவிட்டு இருக்கிறேன்.

அவருக்கு எனக்கு தெரிந்த பவுலிங் நுணக்கங்களை கற்றுக்கொடுத்து வருகிறேன்” என்றார்.மேலும் “நான் ஒன்றை மட்டும் சொல்கிறேன். அர்ஜூன் கடுமையாக உழைக்கக் கூடியவர். தொடர்ந்து கிரிக்கெட்டை விடாமல் கற்றுக்கொண்டு இருக்கிறார். மும்பைக்காக சிறப்பாக விளையாட என்னால் முடிந்த பயிற்சிகளை நான் நிச்சயம் கொடுப்பேன்.

- Advertisement -

arjun 2

கொஞ்சம் பொறுத்தால் சிறந்த கிரிக்கெட் வீரராக அவர் வலம் வருவார். அவரைப் பற்றி இப்போது எல்லோரும் பேசுகிறோம். அவரின் திறமையை நிச்சயம் அவர் வெளிப்படுத்துவார்” என்றார் ஜாகீர் கான். மேலும் திறமையின் காரணமாக மட்டுமே அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

arjun-tendulkar

இருப்பினும் மும்பை அணியின் ஆலோசகராக இருக்கும் சச்சினின் மகன் என்பதால் அவருக்கு இடமளிக்கப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டாலும் அர்ஜுன் டெண்டுல்கர் தொடர்ச்சியாக தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது மும்பை அணிக்காக தேர்வு செய்யப்பட்ட அவர் மும்பை அணியில் விளையாடும் பட்சத்தில் ஒரே அணிக்காக தந்தை மற்றும் மகன் ஆகியோர் விளையாடி உள்ளனர் என்ற சாதனையை படைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement