கில் – ஜெய்ஸ்வால் ஆகியோரில் யார் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும்.. ஜஹீர், மோர்கன் தேர்வு

Zaheer and Morgan
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடப் போகும் வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இம்முறை ரோகித் சர்மா தலைமையில் களமிறங்க உள்ள இந்திய கிரிக்கெட் அணியில் 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் உள்ள வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது போன்ற சூழ்நிலையில் இந்திய அணியின் துவக்க வீரராக கேப்டன் ரோகித் சர்மா களமிறங்குவது உறுதியாகியுள்ளது. அவருடன் 2வது துவக்க வீரராக களமிறங்குவதற்கு சுப்மன் கில் – யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரிடையே போட்டி காணப்படுகிறது. அதில் கடந்த ஐபிஎல் தொடரில் அதிவேகமான அரை சதமடித்து 625 ரன்கள் குவித்து மிரட்டிய ஜெய்ஸ்வால் இந்தியாவுக்காகவும் அறிமுகமாகி அபாரமாக செயல்பட்டார்.

- Advertisement -

கில் – ஜெய்ஸ்வால்:
இருப்பினும் இந்த ஐபிஎல் தொடரில் அவர் ராஜஸ்தான் அணிக்காக சற்று தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறார். மறுபுறம் சச்சின், விராட் கோலிக்கு பின் இந்திய அணியின் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று பாராட்டும் அளவுக்கு பெயர் வாங்கியுள்ள சுப்மன் கில் இம்முறை குஜராத் அணியின் கேப்டனாக ஓரளவு நன்றாக விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்த 2 வீரர்களில் சுப்மன் கில் கண்டிப்பாக உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று ஜஹீர் கான் கூறியுள்ளார்.

ஜியோ சினிமா சேனலில் இது பற்றிய விவாதத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக தேர்வு குழுவுக்கு பெரிய சிரமம் இருக்கும். ஏனெனில் எந்த அணியை நீங்கள் பார்த்தாலும் டாப் ஆர்டரில் விளையாடுவதற்கு நிறைய வீரர்கள் டிராபிக்கை ஏற்படுத்துவார்கள். எனவே தேர்வாளர்கள் எந்த கோணத்தில் செல்கிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்”

- Advertisement -

“ஆனால் நீங்கள் என்னை கேட்டால் சுப்மன் கில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நான் சொல்வேன். ஜெய்ஸ்வாலுடன் போட்டி என்று வரும் போது கில் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஏற்கனவே இந்தியா ரோஹித்தை தங்களுடைய கேப்டனாக அறிவித்துள்ளது. எனவே அவருடன் விளையாடப் போவது யார் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும்” கூறினார். அதே நிகழ்ச்சியில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: காயத்தால் விலகிய டேவோன் கான்வேவுக்கு பதில்.. சிஎஸ்கே அணி வாங்கிய இங்கிலாந்து வீரர் யார்?

“இங்கு மட்டுமல்ல உலகம் முழுவதிலும் விளையாடுவதற்கு சுப்மன் கில் அற்புதமான வீரர். விமானத்தில் மட்டுமல்ல பிளேயிங் லெவனிலும் ஒரு போட்டியாளராக இருக்க வேண்டும். இந்திய அணியின் 6 – 7 பேட்ஸ்மேன்களில் அவருக்கும் ஜெய்ஸ்வாலுக்கும் போட்டி இருக்கும். ஆனால் விராட் கோலிக்கு எதிராக போட்டி இருக்காது. ஏனெனில் பொறுத்த வரை விராட் கோலி ஏற்கனவே அணியில் இருப்பார்” என்று கூறினார்.

Advertisement