விஜய் ஷங்கர் விக்கெட் வீழ்த்தும் முன் கோலியும், ஏ.பி.டி யும் இதையே சொன்னார்கள் – ஆட்டநாயகன் சாஹல்

Chahal-2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டி நேற்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வார்னர் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்களை குவித்தது அதிகபட்சமாக அறிமுக வீரர் படிக்கல் 56 ரன்களும் டிவில்லியர்ஸ் 51 ரன்களும் அடித்தனர்.

padikkal

- Advertisement -

அதன் பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி மணிஷ் பாண்டே பேர்ஸ்டோ ஆகியோர் விளையாடிய விதத்தை பார்க்கும் போது எளிதில் வெற்றி பெறும் என்று நினைத்தனர். ஆனால் இறுதியில் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் விழுந்து 153 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக பேர்ஸ்டோ 61 ரன்கள் குவித்தார். இதனால் பெங்களூரு அணி 10 ரன் வித்தியாசத்தில் இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஆட்டநாயகனாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய பெங்களூரு அணியின் சுழற்பந்து வீச்சாளர் தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் 4 ஓவரையும் வீசிய சாஹல் 18 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்நிலையில் இந்த போட்டியின் இந்தப் போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகனாக சாகல் தனது பந்து வீச்சு குறித்து பேசுகையில் :

chahal 1

முதல் ஓவரில் இருந்து நான் பந்து வீசும்போது ஸ்டஃம்ப் டு ஸ்டம்ப் பந்துவீச தீர்மானித்தேன். ஏனெனில் சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் அவர்களுக்கு எதிராக ஒரு அழுத்தத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு பந்துவீசி பேர்ஸ்டோ விக்கெட்டை வீழ்த்தியது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

shankar

அதன் பின்னர் விஜய் சங்கர் பேட்டிங் செய்ய வந்தார். அவர் இறங்கும் முன்னர் விராட் கோலி மற்றும் ஏ.பி.டி ஆகிய இருவரும் என்னிடம் வந்து அவருக்கு எதிராக முதல் பந்தை கூக்ளியாக வீசு என்று கூறினார்கள். அவர்கள் கூறியது போலவே கூக்ளி பந்தை வீசினேன் அந்த பந்து விக்கெட் எடுத்துக் கொடுத்தது என்று சாஹல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement