ராகுல் டிராவிட் கூறிய இந்த விஷயம் தான் தற்போது நான் சிறப்பாக பந்துவீச காரணம் – சாஹல் மகிழ்ச்சி

Yuzvendra-Chahal
- Advertisement -

இந்திய அணியின் இளம் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். அதோடு ஏகப்பட்ட இளம் வீரர்கள் அவரது இடத்திற்கு போட்டிக்கு வந்ததால் சமீப காலமாக வாய்ப்பின்றி தவித்து வந்த அவர் ஐபிஎல் தொடரில் அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி தற்போது மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்து முதன்மை சுழற்பந்து வீச்சாளராக அசத்தி வருகிறார், அதோடு எதிர்வரும் டி20 உலக கோப்பையிலும் சாஹலே முதன்மை சுழற்பந்து வீச்சாளராக இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Chahal

- Advertisement -

தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். அதன்படி இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று ட்ரினிடாட் நகரில் நடைபெற்று முடிந்தது. பரபரப்பான இந்த போட்டியில் இந்திய அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 309 ரன்கள் என்கிற இலக்கினை துரத்தியபோது வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய வீரர்களான பிரன்டன் கிங் மற்றும் ரோவ்மன் பவல் ஆகியோரை வீழ்த்தி இந்திய அணிக்கு சாஹல் திருப்புமுனை அளித்தார். அதோடு 10 ஓவர்கள் வீசிய அவர் 58 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

chahal

அதோடு 40வது ஓவருக்கு மேல் மூன்று ஓவர்களை அவர் வீசியிருந்தது அவருடைய தைரியத்தை வெளிக்காட்டியது. இந்நிலையில் தான் இப்படி தைரியமாகவும், சிறப்பாகவும் பந்து வீச காரணம் இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

நான் பயிற்சியில் ஈடுபடும்போது டிராவிட் என்னிடம் வந்து : “உன்னுடைய திறமையை நீ வெளிப்படுத்த வேண்டும்” உன்னுடைய பலம் என்ன என்பது எனக்கு தெரியும். நிச்சயம் அதனை ஒவ்வொரு போட்டியிலும் நீ வெளிப்படுத்த வேண்டும். என்னுடைய ஆதரவு உனக்கு எப்போதும் உண்டு என கூறி என்னை ஊக்கப்படுத்தி என்னுடைய பயிற்சியையும் சரியான முறைக்கு கொண்டு சென்றார்.

இதையும் படிங்க : காயத்திலிருந்து திரும்பிய முதல் போட்டியிலேயே ஆல்-ரவுண்டராக வெற்றிபெற வைத்த தமிழக வீரர் – கவுண்டியில் சிறப்பான கம்பேக்

டிராவிடின் இந்த வார்த்தைகளே தற்போது நான் தன்னம்பிக்கையுடன் பந்து வீச காரணம். அதுமட்டும் இன்றி எந்த நேரத்தில் பந்து வீசினாலும் அதற்கேற்றார் போல் லைன் அண்ட் லென்த்தை மாற்றி வீசி வருவதும் டிராவிட் எனக்கு கொடுத்த பயிற்சியினால் தான். எனவே இந்த சிறப்பான பந்துவீச்சுக்கு டிராவிட் கொடுத்த பயிற்சி மற்றும் ஊக்கமே காரணம் என யுஸ்வேந்திர சாஹல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement