Yuvraj Singh : என்னை பிரமிக்க வைத்த வெளிநாட்டு வீரர்கள் இவர்கள்தான் – யுவராஜ் பேட்டி

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், இடதுகை அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங் சில நாட்களுக்கு தனது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.அதன்படி யுவராஜ் சிங் நேற்று பத்திரிக்கை

Yuvraj
- Advertisement -

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், இடதுகை அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங் சில நாட்களுக்கு தனது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.அதன்படி யுவராஜ் சிங் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது : நான் இதுவரை 400க்கும் மேற்பட்ட போட்டிகளில் இந்திய அணிக்காக பங்கேற்று விளையாடி அது எனது அதிர்ஷ்டம்.

yuvraj 3

பல போட்டிகளில் நான் சிறப்பாக விளையாடி உள்ளேன். அதில் நிறைய போட்டிகள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமாகவும் மறக்க முடியாத போட்டிகள் யாவும் இருக்கின்றன. அந்த வகையில் 2002ஆம் ஆண்டு நாட்வெஸ்ட் கோப்பை மற்றும் 2011ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான உலக கோப்பையின் இறுதி போட்டி என்னால் மறக்க முடியாத போட்டிகளாகும் என்றும் கூறினார்.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய பேட்டியின்போது யுவராஜ் சிங் தான் சந்தித்த அவரை பிரமிக்க வைத்த வெளிநாட்டு வீரர்கள் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது : நான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் பலதரப்பட்ட பேட்ஸ்மேன்களை சந்தித்துள்ளேன். அதில் வெளிநாட்டு பேட்ஸ்மேன்களான ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டிங் திறமை எனக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருந்தது. அதே போன்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர்கள் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி வீரரான ஏபிடி ஆகியோரது ஆட்டமும் என்னை பிரம்மிக்க வைத்தது.

Ricky-Ponting

அந்த அளவிற்கு அவர்கள் சிறப்பாக பேட்டிங்கில் செயல்பட்டுள்ளார்கள் என்று யுவராஜ் கூறியுள்ளார். யுவராஜின் இந்த ஓய்வு அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை அளித்துள்ளது. மேலும் யுவராஜ் ரசிகர்கள் அனைவரும் யுவராஜுக்கு பிரியா விடை போட்டி நடத்த வேண்டும் என்று இந்திய அணியிடம் ட்விட்டர் மூலமாக கோரிக்கைகளை வைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement