தோனியின் ஓய்வு குறித்து முதன்முறையாக வாய்திறந்து கருத்து சொன்ன யுவராஜ் – விவரம் இதோ

Yuvraj
- Advertisement -

உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் வெளியேறிய பின்னர் தோனியின் ஆட்டம் குறித்து அதிகம் விமர்சிக்கப்பட்டது. மேலும் அடுத்தடுத்த தொடர்களான வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்ரிக்க தொடரில் தோனி இடம் பெறவில்லை.

Dhoni

- Advertisement -

மேலும் உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியில் இருந்து தோனி ஓய்வினை அறிவிக்க வேண்டும் என்று சிலர் கூறிவந்தனர். ஆனால் தோனி ஓய்வு குறித்து எந்த ஒரு கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தற்போது தோனியின் ஓய்வு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

அதில் யுவராஜ் தோனி குறித்து கூறியதாவது : இந்திய அணிக்காக பல சாதனைகளை தோனி புரிந்துள்ளார். அவர் இந்திய அணியின் சிறந்த கேப்டனாகவும் பல ஆண்டுகள் இருந்துள்ளார். அவர் எப்போது ஓய்வு பெறவேண்டும் என்பது அவரே முடிவு செய்ய வேண்டும். அதை நாம் யாரும் முடிவு செய்ய வேண்டாம்.

Yuvraj 1

அவர் இந்திய அணிக்காக இன்னும் சில நாட்கள் விளையாட வேண்டும் என்று அவர் முடிவு எடுத்தால் அதை நாம் மதிக்கவேண்டும். மேலும் தோனியுடன் யாரையும் ஒப்பிட கூடாது ஏனெனில் தோனி உடனே ஒன்றும் பெரிய வீரராக உருவாக்கவில்லை. அவர் மிகப் பெரிய வீரராக மாற சில காலம் முதல் அவருக்கு தேவைப்பட்டது அதனை போன்று வீரர் உருவாக சில காலங்கள் தேவைப்படும் என்று யுவராஜ் கூறினார்.

Advertisement