11 வயது ரசிகனுடன் சந்திப்பு..! அனைவரையும் நெகிழவைத்த யுவராஜ்..! ஏன் தெரியுமா – காரணம் இதுதான் ?

yuvraj1
- Advertisement -

ஆறு சிக்சர்கள் என்றதும் நம் நினைவிற்கு முதலில் வருவது யுவராஜ் சிங் தான். இந்திய வீரரான இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியா உலகை கோபையை வெற்றிபெற்றதில் பெரும் பங்கை வகித்தவர். அந்த உலக கோப்பையில் இந்திய அணி விளையாடிய கடைசி 3 முக்கியான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வந்தவர்.உலக கோப்பை தொடருக்கு பின்னர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட யுவராஜ் சிங்கிற்கு புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

yuvi

இதனால் கிரிக்கெட்டிலிருந்து சில நாட்கள் விளகிய இவருக்கு புற்று நோய் அறுவை சிகிச்சையும் நடைபெற்றது. நீண்ட வருடங்கள் கழித்து புற்றுநோயில் இருந்து விடுபட்டு கிரிக்கெட் மீதுள்ள தாகத்தால் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தொடங்கினார். தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் யுவராஜ் புற்று நோய்க்கான ஒரு அறக்கட்டளையும் நடத்தி வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் நடந்த ஒரு ஐ.பி.எல் போட்டியின் போது யுவ்ராஜ் தனது குட்டி ரசிகர் ஒருவரை சந்தித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அந்த சிறுவனிடம் நீண்ட நேரம் பேசிய யுவ்ராஜ், அவரது சிகிச்சை செலுவுகளை பொறுப்பேற்றுள்ளார். மேலும் அவருக்கு பஞ்சாப் அணியின் ஜெர்சி, தொப்பி உள்ளிட்ட பொருட்களை கொடுத்து அவருக்கு வாழ்த்துக்களையும் கூறி வழி அனுப்பிவைத்துள்ளார் யூவி.

yuvraj

இந்த அற்புதமான தகவளை பஞ்சாப் அணி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மேலும், யுவ்ராஜ் அந்த சிறுவனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பஞ்சாப் அணி.

Advertisement