Yuvraj Singh : மீண்டும் கிரிக்கெட் விளையாடபோகும் யுவராஜ். எந்த நாட்டில் தெரியுமா ?

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், இடதுகை அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங் சில நாட்களுக்கு தனது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் ஐபிஎல் போட்டிகளிலும் இனிமேல்

yuvraj1
- Advertisement -

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், இடதுகை அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங் சில நாட்களுக்கு தனது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் ஐபிஎல் போட்டிகளிலும் இனிமேல் விளையாடப்போவதில்லை என்றும் அறிவித்தார்.

Yuvraj

- Advertisement -

இந்நிலையில் பிசிசிஐ கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் யுவராஜ் ஓய்வு பெற்றதால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். மேலும் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டேன் என்று ஏற்கனவே யுவராஜ் தெளிவாக கூறிவிட்டார். இருப்பினும் வெளிநாட்டு நடக்கும் டி20 போட்டிகளில் விளையாட ஆர்வமாக இருப்பதாகவும் யுவராஜ் தெரிவித்தார்.

அதன்படி தற்போது கனடா நாட்டில் குளோபல் டி20 தொடர் இரண்டாவது சீசன் நடைபெற உள்ளது. இந்த சீசனில் டொரண்டோ நேஷனல் அணிக்கு இந்திய அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் தொடர் அடுத்த மாதம் 25ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடக்கிறது.

YuvrajSingh

இதனை குளோபல் கனடா டி20 தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த மாதம் யுவராஜ் கனடா நாட்டில் கிரிக்கெட் விளையாடப்போவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய அணியில் இருந்து யுவராஜ் ஓய்வு பெற்றதால் கனடா தொடரில் பங்கேற்க யுவராஜ்க்கு எந்த கட்டுப்படும் இருக்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement