CWC 2023 : இதுக்கு தான் ஸ்ரேயாஸ் வேணாம்னு சொன்னேன்.. இப்போவாச்சும் அவர 4வதாக எறக்குங்க.. யுவி விமர்சனம்

Yuvraj Singh
- Advertisement -

கோலாகலமாக துவங்கி நடைபெற்று வரும் ஐசிசி 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 8ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய பயணத்தை வெற்றியுடன் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49.3 ஓவரில் வெறும் 199 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்களை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 200 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா, இஷான் கிசான், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய டாப் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் வேகத்தில் அடுத்தடுத்து டக் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர்.

- Advertisement -

யுவராஜ் விமர்சனம்:
அதன் காரணமாக தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுக்கு மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் 4வது விக்கெட்டுக்கு 165 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றினார்கள். அதில் விராட் கோலி 85 ரன்களில் ஆட்டமிழந்தாலும் கடைசி வரை அவுட்டாகாத ராகுல் 97* ரன்கள் குவித்து 41.2 ஓவரிலேயே இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ராகுல் 4வது விளையாட வேண்டும் என்று யுவராஜ் சிங் மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளார். அதாவது ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை இழந்தால் அழுத்தத்தை தாங்கி பிடித்து வெற்றி பெற வைப்பதற்கு ராகுல் போன்ற நல்ல ஃபார்முக்கு வந்துள்ள க்ளாஸ் நிறைந்த வீரர் 4வது இடத்தில் விளையாட வேண்டும் என்று கடந்த வாரம் யுவராஜ் சிங் பேட்டியில் வெளிப்படையாகவே கேட்டுக் கொண்டிருந்தார்.

- Advertisement -

இருப்பினும் ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த வருடம் அந்த இடத்தில் சிறப்பாக செயல்பட்டு காயத்திலிருந்து குணமடைந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தூரில் சதமடித்ததால் இப்போட்டியில் 4வது இடத்தில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். ஆனால் ரோகித் மற்றும் இசான் டக் அவுட்டானதும் நிதானத்தை காட்ட வேண்டிய அவரும் டக் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்த்தார்.

இதையும் படிங்க: CWC 2023 : இதுக்கு தான் ஸ்ரேயாஸ் வேணாம்னு சொன்னேன்.. இப்போவாச்சும் அவர 4வதாக எறக்குங்க.. யுவி விமர்சனம்

இருப்பினும் நல்லவேளையாக மார்ஷ் விட்ட கேட்ச்சை பயன்படுத்தி விராட் கோலி இந்தியாவை காப்பாற்றியதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள யுவராஜ் இனியாவது 4வது இடத்தில் ராகுல் விளையாடுவதை பற்றி யோசிக்குமாறு கூறியுள்ளது பின்வருமாறு. “நம்பர் 4 பேட்ஸ்மேன் அழுத்தத்தை ஏற்று விளையாட வேண்டும். அந்த சூழ்நிலையில் ஸ்ரேயாஸ் இன்னிங்ஸை ஒரு கட்டமைப்பு செய்யும் வகையில் யோசித்து விளையாடியிருக்க வேண்டும். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்த பின்பும் ராகுல் ஏன் 4வது இடத்தில் விளையாடவில்லை என்பது எனக்கு புரியவில்லை. அதே போல விராட் கோலி கேட்ச் விட்டது ஆஸ்திரேலியாவுக்கு தோல்வியை கொடுக்கலாம்” என்று கூறியுள்ளார்.

Advertisement